india

img

உக்ரைனில் உயிரிழந்து கர்நாடக மாணவரின் உடல் திங்கட்கிழமை இந்தியா வருகை - பசவராஜ் பொம்மை 

உக்ரைனில் உயிரிழந்த 21 வயதான கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் திங்கட்கிழமை இந்தியா கொண்டு வரப்படுவதாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

உக்ரைன் கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா  உக்ரைன் - ரஷ்யப் போரின் ராணுவ தாக்குதலின் உயிரிழந்தார். 

இந்நிலையில், நவீனின் உடலைச் சொந்த ஊர் கொண்டு வருமாறு உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நவீனின் உடல் பெங்களூரு விமான நிலையம் கொண்டு வரப்படும் என்றும், திங்கட்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமெனவும் கர்நாடக முதல்வர் பசவராஜ்  பொம்மை தெரிவித்துள்ளார்.  

நவீனின் உடலை தேவநாகரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்குத் தானமளிக்க தாங்கள் முடிவு செய்துள்ளதாகவும் அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

 

;