உத்தரப்பிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கீழமை நீதி மன்றங்கள் வழிபாட்டு உரிமை சட்டம் -1991ஐ மீறுவதையும், சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நிதிபதி வி.எச்.பி. கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தான இந்து பெரும்பான்மைக்கு கட்டுப்பட்டுதான் சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்ற இஸ்லாமிய வெறுப்புப் பேச்சையும் ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் தலை யிட்டு நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
உலகம் முழுவதும் டிசம்பர்-18ஆம் தேதி சிறுபான்மை யினர் உரிமை தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. வங்கதேசம் உட்பட உல கின் பல்வேறு நாடுகளில் சிறு பான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மதச்சார்பற்ற இந்திய மக்களாகிய நாம் வன்மை யாகக் கண்டித்து வருகிறோம்.
இந்திய ஒன்றிய, மாநிலங்களில் ஆட்சி பொறுப்பில் இருக்கிற வகுப்புவாத பாஜக அரசுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற உரிமைகளை மீறி சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும், அதனுடைய சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதோடு, சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்கான சகல உரிமைகளையும் பறித்து வருகிறது. ஜனநாயக எண்ணம் கொண்ட இந்திய மக்களாகிய நாம் தொடர்ந்து அதற்கு எதிராக குரல் கொடுத்து வரு கிறோம்.
தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ மீறி கீழமை நீதி மன்றங்களில் தனக்கு சாதகமான வர்களை பயன்படுத்தி ஆய்வு என்ற பெயரில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அபகரிக் கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டுரிமையையும் நிலை நாட்ட சர்வதேச சிறுபான்மையினர் உரி மை தினத்தில் உறுதி ஏற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி வழிபாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்தனவோ அதன் மீது யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்ற இந்த (1991) சட்டத்தை மீறி நீதிமன்றங்களும், ஆர்எஸ்எஸ் ஆல் வழிநடத்தப்படுகிற பாஜக அரசாங்கங்கள் செயல்படுவது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு, மதச்சார்பின்மைக்கு, மத வழிபாட்டு உரிமைக்கு எதிரானதாகும். அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பில் துவங்கி இந்த சட்ட மீறல் உச்ச நீதிமன்றத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
கியான் வாபி மசூதி, மதுரா ஈத்கா மசூதி, சம்பல் மசூதி என தொடர்ந்து நீதிமன்றங்கள் சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் மீது ஆய்வு களை அனுமதிப்பது சட்ட மீறலாகும். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பிகளும், தேசத்தின் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாலும் உருவாக்கப்பட்ட “1991 மத வழி பாட்டுத்தலங்கள் சட்ட” த்தை எந்தக் காரணம் கொண்டும் மீறுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. இந்திய அரசும், உச்சநீதிமன்றமும் இதை தலையிட்டு உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியாகப் பற்றி நின்று சிறு பான்மை மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டுரிமையை காத்திட சர்வ தேச சிறுபான்மையினர் உரிமை தினத்தில் உறுதி ஏற்க அணிதிரள வேண்டுமென தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு கேட்டுக் கொள்கிறது. வழிபாட்டு உரிமைச் சட்டம் 1991ஐ உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நடை பெறும் கண்டன இயக்கத்தில் பங்கேற்று ஆதரவு தர வேண்டும் என தமிழக மக்களை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.