முகமது ஜுபேர் மீது தேச துரோக வழக்கு உட்பட் மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி சாமியார் நர்சிங்கானந்த், முகமது நபி குறித்து அவதூராக பேசிய காணொளியை பிரபல தகவல் சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபேர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ‘வெறுப்பு பேச்சு’ என குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து, உதித்த தியாகி என்பவர் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், காசியாபாத் போலீசார் முகமது ஜுபேர் மீது கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி அன்று, பி.என்.எஸ் 196, 228, 299, 356(3) மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்த செய்ய கோரி முகமது ஜுபேர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது, முகமது ஜுபேர் மீது BNS சட்டப் பிரிவு 152 (இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஆகிய 2 பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச போலீசார் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் முகமது ஜுபேருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். முகமது ஜுபேருக்கு ஆதரவு தெரிவித்து திரைகலைஞர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜுபேரை நான் ஆதரிக்கிறேன். #IStandWithZubair பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கு நீங்களும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.