india

img

அது “புனித நீர்” அல்ல; ஏசி தண்ணீர்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா அருகே விருந்தாவனம் பகுதியில் உள்ளது தாகூர் பாங்கே பிஹாரி கிருஷ் ணன் கோவில். இந்த கோவிலின் யானை சிற்பத்தில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுந்து வருகிறது. இது கிருஷ் ணரின் பாதத்தில் இருந்து வரும் புனித நீர் (சரணமிர்தம் - தீர்த்தம்) என கோவில் பூசாரிகள் கூற, கோவிலுக்கு வரும் மக்கள் அதனை குடித்தும், பாட்டிலில் பிடித்து வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், யூடியூபர் ஒருவர் (அவர் பெயரை வெளியிட விரும்ப வில்லை),”யானை சிற்பத்தில் இருந்து விழும் தண்ணீர் புனித நீர் அல்ல. அது ஏசியில் இருந்து விழும் தண்ணீர். ஏசி யின் டிஸ்சார்ஜ் வாட்டரை தான் மக்கள் புனித நீராக எடுத்துச் செல்கின்றனர்” என போட்டுடைத்துள்ளார். 

இந்த வீடியோவை “டிவி 1 இந்தியா”  சேனல் வெளியிட சமூகவலைத்தளங்க ளில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வரு கிறது. மேலும் வீடியோ வெளியான பின்பு ஏசி நீரை எடுத்துச் செல்வதற்கு கப் (டீ குடிக்கும் கோப்பை) மற்றும் பாட்டில்  கொடுத்து காணிக்கை என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.