india

img

நெருங்கிவரும் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல்... லக்னோவில் ரூ. 45 கோடியில் அம்பேத்கர் நினைவு இல்லம்...

லக்னோ:
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ-வில் ரூ. 45 கோடி செலவில் அமையும் டாக்டர் அம்பேத்கரின் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டியுள்ளார்.

அய்ஷ்பாக்கில் சுமார் 5,493 சதுர அடியில் அமையும் அம்பேத்கர் நினைவு இல்லத்தில், 750 பேர் அமரும்வசதி கொண்ட கலையரங்கம், நூலகம், ஆராய்ச்சி மையம், அருங்காட்சியகம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. அம்பேத்கரின் 25 அடி சிலையும் நிறுவப்பட உள்ளது.உத்தரப்பிரதேசத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு தரப்பினரின் வாக்குகளை குறிவைத்து பாஜக வேலைசெய்து வருகிறது. அதனொரு பகுதியாகவே, அம்பேத்கரின் நினைவுஇல்லத்தை அமைப்பதற்கு, முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் கூடிய உத்தரபிரதேச அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. தற்போது அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.

;