உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.