india

img

உத்தரப்பிரதேச சாலை விபத்தில் 5 பேர் பலி  

உத்தரப்பிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

உத்தரகண்ட்டில் உள்ள கேதார்நாத் புனிதத் தலத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வந்து கொண்டிருந்த போது புலந்த்ஷாரின் குலாவதி பகுதியில் அதிகாலை கார் டிரக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக மாவட்ட நீதிபதி சந்திர பிரகாஷ் சிங் கூறினார். இதையடுத்து காயமடைந்தவர்களை மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹர்திக் (6), வான்ஷ் (5), ஷாலு (21), ஹிமான்ஷு (25) மற்றும் பராஸ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;