இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக் காலம் முடிவதால், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட நாராயணன் எல்.பி.எஸ்.சியின் (LPSC) இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இவர், சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல்1, ககன்யான் போன்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் வரும் ஜனவரி 14ஆம் தேதி பதவியேற்கிறார்.