india

img

ஜூன் 4-இல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம்: எஸ்.எப்.ஐ, டி.ஒய்.எப்.ஐ அமைப்புகள் அறிவிப்பு!

இந்திய மல்யுத்த வீரர்கள் நீதி கேட்டு போராடி வரும் நிலையில், ஜூன் 4-இல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த  2011-ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.  இவர் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள், புதிதாக பயிற்சிக்கு சேரும் சிறுமிகள், பெண் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமாக இருக்கும் சில பயிற்சியாளர்களுக்கும் பாலியல் தொல்லை, மனதளவில் நெருக்கடி அளித்ததாகவும் இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் குற்றம்சாட்டினார்.  வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட நடசத்திரங்கள் பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,ஜூன் 4-இல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

;