india

img

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண் குழந்தைகள்தான் –ஆய்வில் தகவல்

நகர்ப்புற குடிசைப் பகுதி மக்களை மையமாக் கொண்டு சேவ் தி சில்ட்ரன், இந்தியா அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில், பெண் குழந்தைகளின் மீது கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி, மகாராஷ்ட்ரா, பீகார், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள நகர்ப்புற குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 1092 தாய்மார்கள் மற்றும் 10 வயது தொடங்கி 18 வயதுக்குட்பட்ட 1092 சிறுமிகளிடம் ஆய்வு நடத்தி, தி வேர்ல்ட் ஆஃப் இந்தியாஸ் கேர்ள்ஸ்: விங்ஸ் 2022 என்ற பெயரில் இவ்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

கோரோனா தொற்றுநோய் பரவல் காலத்தின்போது சுமார் 68 சதவிகிதம் இளம்பெண்கள் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் கிடைக்கப்பெறுவதில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.

அதே நேரத்தில் 67 சதவிகிதம் பேர் இணைய வழி வகுப்புகளுக்குச் செல்லவில்லை எனவும், 56 சதவிகிதம் பேருக்கு வெளியில் சென்று பொழுதுபோக்குகளில் ஈடுபட நேரம் கிடைக்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இளம்பெண்கள் அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை இழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.