india

img

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன விற்பனை 10 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல்!

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன விற்பனையில் 10 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக டீலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில்  ஒகினாவா, ஓலா மின்சாரம் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் மத்தியில் உயிர் தேசம் ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.  

மேலும் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு முறையில் இருப்பதால், முன்பதிவுகளில் குறைந்தது 10 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக டீலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

இதனைதொடர்ந்து மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிவது குறித்து பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, பேட்டரியில் கோளாறு உள்ளதாக ஒகினாவா ஆட்டோடெக் 3,215 மின்சார இருச்சக்கர வாகனங்களை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.