india

img

இந்தியாவில் புதிதாக 602 பேருக்கு கோவிட் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 602 பேருக்கு கோவிட் தொற்று பதிவாகியுள்ள நிலையில், 5 உயிரிழப்புடன், கோவிட் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,440 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் 2 பேர், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப்பில் தலா 1 என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். iஇதுவரை இந்தியாவில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,371 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் அதிகபட்சமாக 147, அதை தொடர்ந்து கோவாவில் 51, குஜராத்தில் 34, மகாராஷ்டிராவில் 26, தமிழ்நாட்டில் 22, தில்லியில் 16, கர்நாடகாவில் 8  ராஜஸ்தானில் 5, தெலங்கானாவில் 2 மற்றும் ஒடிசாவில் 1 என மொத்தம் 312 பேருக்கு JN.1 வகை தொற்றால் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

;