india

img

பி எஸ் எல் வி சி – 15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது -  இஸ்ரோ சிவன்

பிஎஸ் எல்வி சி – 15 ராக்கெட்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு  பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் ,19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்த ராக்கெட்டில் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா -1 செயற்கைக் கோள்,இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது :
“பி.எஸ்.எல்.வி சி-51, அமேசானியா -1 ஐ இன்று அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  இதில் இஸ்ரோவும் பிரேசிலால் வடிவமைக்கப்பட்ட மற்றும் இயக்கப்படும் முதல் செயற்கைக்கோளை ஏவியதில் மகிழ்ச்சி மற்றும் பெருமையடைகிறேன். மேலும் இஸ்ரோ குழுவிற்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கின்றேன் என கூறினார். 

;