india

img

இட ஒதுக்கீடு விவகாரம்: பின்வாங்கிய ஒன்றிய அரசு!

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாத எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி பணியிடங்களை, பொதுப் பணியிடங்களாக மாற்றும் யுஜிசி-யின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, ஒன்றிய அரசு பின்வாங்கியது.
உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதில் ஒரு புதிய வரைவு நெறிமுறைகளை கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாத எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி பணியிடங்களை, பொதுப் பணியிடங்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான பொதுமக்களின் கருத்துக்கேட்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கிடையில், கல்வியாளர்கள், சிபிஎம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பான புதிய வரைவு நெறிமுறைகள் அமல்படுத்தப்படாது என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில், மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீடு) சட்டம், 2019-இன் அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய கல்வித்துறை அறிவித்துள்ளது.