india

img

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம்!

மறைந்த சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு வரும் 28-ஆம் தேதி தில்லியில் இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறதாக சிபிஎம் மத்தியக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎம் மத்தியக் குழு கூறியதாவது:
"தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம், புதுதில்லி, தல்கடோரா உள்விளையாட்டு அரங்கில், செப்டம்பர் 28-ஆம் தேதி அன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
அனைவரும் மதியம் 3 மணிக்கு முன் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.