india

img

5 ஆண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி!

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாராக் கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், கடந்த 2021-2022 நிதியாண்டில் ரூ.1,74,966 கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியும், 2019-2020 நிதியாண்டில் ரூ.2,34,170 கோடியும், 2018-2019 நிதியாண்டில் ரூ.2,36,265 கோடியும், 2017-2018 நிதியாண்டில் ரூ.1,61,328 கோடியும், மொத்தமாக ரூ.10,09,511 கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், "மோடி அரசு பொது மக்களின் பணத்தை அதன் கூட்டுக் களவாணி முதலாளிகள் கொள்ளையடிக்க உதவுவது அவமானம். 2021-22ம் நிதியாண்டு வரை கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.8,48,186 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளன.  கூட்டுக் கொள்ளையர்களுக்கு வஞ்சகமாக தரப்பட்ட இந்த தொகையை பயன்படுத்தி எத்தனை பள்ளிகளும், மருத்துவமனைகளும் கட்டியிருக்கலாம்? இது பகற்கொள்ளை!" என்று தெரிவித்துள்ளார்.