மனோஜ் ஜாரங்கேவின் தொடர் போராட்டத்தால் பணிந்த மகா ராஷ்டிரா அரசு ஜனவரி மாத இறுதி யில் மராத்தா இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்தது. “மராத்தா இடஒதுக்கீடு வழங்குவது நல்ல விஷயம்தான். ஆனால் ஒபிசி பிரிவுக்குள் தற்போ துள்ள ஒதுக்கீட்டைப் பகிர்வதை ஏற்க முடியாது” எனக் கூறி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேசிய வாத காங்கிரஸ் (அஜித்) கட்சியின் ஓபிசி தலைவர் சாகன் புஜ்பால்.
இந்நிலையில், வெள்ளியன்று இரவு கடிதம் மூலம் சாகன் புஜ்பாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. கடி தத்தில்,”அமைச்சரைத் தாக்க 5 பேருக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விழிப்புடன் இருப்பது நல் லது” என கூறப்பட்டுள்ளது. கடிதம் வந்த பின்பு சாகன் புஜ்பால் வசிக்கும் நாசிக் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், “எனக்கு எத் தனை மிரட்டல் வந்தாலும் நான் என் நம்பிக்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார் சாகன் புஜ்பால்.