india

அதானியின் ரூ.100 கோடி நன்கொடையை ஏற்க மாட்டோம் : தெலுங்கானா முதல்வர் ரேவந்த்

ஹைதராபாத் அதானியின் ரூ.100 கோடி நன்கொடையை ஏற்க மாட்டோம் என்று தெலுங் கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். 

அதானி விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக நாடு முழு வதும் விவாதம் நடைபெற்று வரு கிறது. அதானியிடமிருந்து தெலுங் கானா அரசும் நன்கொடை பெற்றது என சிலர் விமர்சனம் செய்து வரு கின்றனர். இந்நிலையில் இந்த அறி விப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

அதானி லஞ்சம் கொடுத்து மின் உற்பத்தி திட்டங்களை பெற்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய பிறகு ஆந்திராவின் முன்னாள் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அரசு அதானி நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு திட்டங்களை கொடுத்த தா என கேள்விகள் எழுந்தன.

அமெரிக்க அரசுத் தரப்பு ஆவ ணங்களின்படி, லஞ்சம் கொடுக் கப்பட்ட பிறகு, ஆந்திரப் பிரதேச மின் நிறுவனங்கள் தோராயமாக ஏழு ஜிகாவாட் சூரிய சக்தியை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இது எந்த இந்திய மாநிலமும் இதுவரை அதானி நிறுவனத்துடன் மின் உற்பத்திக்காக மேற்கொள்ளப் படாத மிகப்பெரிய ஒப்பந்தமாகும். 

இந்நிலையில் அந்த திட்டத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

அதானி மீதான ஊழல் குற்றச் சாட்டுக்குப்பிறகு கென்யா அந்நிறு வனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. பிரான்ஸ் எண்ணெய் நிறுவனமான டோட்டல் எனர்ஜி, அதானி குழுமத்தில் அதன் 20 சதவீதம் பங்குகளுக்கு மேலும் முதலீடு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா அரசு அதானியின் ரூ.100 கோடி நன் கொடையை ஏற்க மறுப்பு தெரி வித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதானி குழுமத்துடனான மின் ஒப்பந்தத்தை ஆந்திர அரசும் மறு பரிசீலனை செய்யுமா?அத்திட் டத்தை ரத்து செய்யுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.