கடந்த வெள்ளியன்று (ஜன. 5) மாலை 5.07 மணியள வில் அமெரிக்காவில் போர்ட் லாந்திலிருந்து கலிபோர்னியா மாகாணத்தின் ஒன்டாரியோ நக ரத்துக்கு 174 பயணிகளுடன் அலாஸ்கா நிறுவனத்தின் போயிங் 787-9 மேக்ஸ் விமானம் புறப்பட் டது. புறப்பட்ட 6 நிமிடங்களில் 16,000 அடி உயரத்தில் (4.8 கி.மீ.) பறந்து கொண்டிருந்தபோது விமா னத்தில் பொருத்தப்பட்ட அவசர கால கதவு திடீரென தனியே பிரிந்து விழுந்து விட்டது.
விமானிகளின் சாதூரியத்தால் கடும் சிக்கலுக்கு இடையே அலாஸ்கா விமானம் போர்ட்லாந்து விமான நிலையத் தில் அவசரமாகத் தரையிறக்கப் பட்ட நிலையில், பயணிகள் அனை வரும் காயமின்றித் தப்பினர். இந்த சம்பவத்தால் அமெரிக்க அரசு போயிங் 737-8 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை விதித்த நிலையில், இந்தியாவில் போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களில் உள்ள
அவசரகால கதவுகளை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி சிஏ) சனியன்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போயிங் 737-8 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள அவசரகால கதவுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், ஆய்வுகள் திருப்திகர மாக நிறைவடைந்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநர கம் திங்களன்று தெரிவித்துள்ளது. 3 நிறுவனங்கள்.. இந்தியாவில் ஆகாசா ஏர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் போயிங் 737-8 மேக்ஸ் விமா னங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.