india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உத்தரகண்ட்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு கார ணமாக கேதார்நாத்தில் சிக்கித் தவிக்கும் 1,500 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க சென்றபோது சூச்சிப்பாறை அருவியில் சிக்கிக் கொண்ட 3 இளைஞர்கள் மீட்கப்பட்டனர்..

ஐ.நா அளவுகோலை விஞ்சி 836 இந்தியருக்கு 1 மருத்துவர் என்ற நிலை இருப்பதாக மக்கள வையில் ஒன்றிய சுகாதார துறையின் இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரி ழந்துள்ளதாக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி கள் குழு தகவல் தெரிவித்துள்ளது. 

“நாட்டு மக்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்ற வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

“வங்கதேசத்தவர்களின் ஊடுருவல் காரண மாக ஜார்க்கண்டின் மக்கள் தொகை கட்டமைப்பு வேகமாக மாறுகிறது. வாக்கு வங்கி  காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமை யிலான அரசு அமைதி காக்கிறது” என அசாம் பாஜக  முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

வயநாட்டின் முண்டக்கை பகுதியில் ரேடார்  சோதனையில் யாரும் உயிரோடு இருப்ப தற்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தேசிய மீட்புப் படை தரப்பில் தகவல் தெரி வித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள 2024 உலக  வளர்ச்சி அறிக்கையின் படி,”அமெரிக்கா வின் தனிநபர் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை  அடைய சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனே சியாவுக்கு 70 ஆண்டுகளும், இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் வரை ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

சண்டிகர்
மோடி அரசு அடாவடி 
பாரீஸ் ஒலிம்பிக் காண பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் நடை பெற்று வரும் நிலையில், இந்த  தொடரை காண “இந்தியா” கூட்டணியில்  அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியின்  மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வரு மான பகவந்த் மான் திட்டமிட்டு இருந்தார்.  அதன்படி ஞாயிறன்று (ஆகஸ்ட் 4) நடை பெறும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி யின் காலிறுதி ஆட்டத்தை  காண விரும்பு வதாகவும், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்குமாறும் ஒன்றிய வெளியு றவுத்துறையிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் மோடி அரசு அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

பாரீஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கியுள்ள  இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம்  பெற்றுள்ள 19 வீரர்களில் 10 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் காரணமாகவே பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாரீஸ் செல்ல அனுமதி கோரியிருந்தார். ஆனால் ஒன்றிய வெளி யுறவுத்துறை,”பகவந்த் மான் தாமத மாக விண்ணப்பித்து இருப்பதால் அனு மதி வழங்க வாய்ப்பில்லை” என அரசி யல் காழ்ப்புணர்ச்சியுடன் அனுமதி மறுத்  துள்ளது. இந்த விவகாரம் கடும்  சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. 

இதே போல கடந்த 2022இல் தில்லி  முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பா ளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர்  செல்வதற்கு அனுமதி கேட்டார். ஆனால்  மோடி அரசு காரணம் இல்லாமல் மறுத்தது. இதே போல   பகவந்த் மானுக்கும் அனு மதி மறுக்கப்பட்டுள்ளதால் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.

சென்னை
“ஒன்றிய அரசே தேசிய பேரிடராகத்தான் உள்ளது”


கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்  பட்ட நிலச்சரிவை தேசிய பேரி டராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைத்தி ருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு இந்த  கோரிக்கையை நிராகரித்து, நிலச்சரி வுக்கு  மாநில அரசே காரணம் என அரசியல்  ஆதாயப் பேச்சுக்களை பேசி வருகிறது.

இந்நிலையில், “ஒன்றிய பாஜக அரசே  தேசிய பேரிடராகத் தான் இருக்கின்ற னர்” என திமுக நாடாளுமன்ற குழு தலை வர் கனிமொழி எம்.பி., விமர்சித்துள் ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில்,”ஒன்றிய பாஜக அரசு எந்த பாதிப்பை யும் தேசிய பேரிடராக அறிவிக்கத் தயா ராக இல்லை. ஏனென்றால் ஒன்றிய பாஜக  அரசு தேசிய பேரிடராகத் தான் இருக்கின்  றது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு எந்த  உதவியும் செய்வது கிடையாது. மாநி லங்களுக்கு நிதி தராமல் ஒன்றிய பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக இழுத்  தடிக்கின்றனர்” என அவர் குற்றம் சாட்டி னார்.

லக்னோ
பாஜக ஆளும் உ.பி.,யில் தாடியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் நீக்கம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலியை அடுத்த நயி பஸ்தி பகுதியைச்  சேர்ந்தவர் ஜிஷான் அலி அருகில் உள்ள  ஒரு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறார்.

இந்நிலையில், ஜிஷான் அலி தாடி வளர்த்துள்ளதை காரணம் காட்டி அவரை  பள்ளியிலிருந்து நீக்கம் செய்துள்ளார்  தலைமை ஆசிரியர். மேலும், “தாடியுடன்  பள்ளிக்கு வர இது ஒன்றும் மதரஸா அல்ல. பொதுக் கல்வி நிலையங்களில் இதுபோல் தாடியுடன் வர அனுமதி யில்லை” என மதரீதியாகத் திட்டியுள்ளார். 

பரேலி பள்ளியில் மாணவர்கள் மற்  றும் முதல்வருக்கு இடையே நடைபெற்ற  இந்த வாக்குவாதங்களை சில மாண வர்கள் மொபைல்களில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.  இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் பரேலி மாவட்ட ஆட்சியர் மற்  றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி  ஆதித்யநாத் ஆகியோருக்கு புகார்களை  அனுப்பியுள்ளனர். ஆனால் இன்னும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது  எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி
இஸ்ரேல் தூதரகத்தில் தில்லி போலீசார் சோதனை

கடந்த ஜூலை 31 அன்று ஈரான் தலை நகர் டெஹ்ரானில் ஹமாஸ் தலை வர் இஸ்மாயில் ஹனியே இஸ்  ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்  பட்டார்.இஸ்மா யில் ஹனியே படு கொலைக்கு இஸ்  ரேல் நாடுதான் கார ணம் என ஈரான்,  துருக்கி உள்ளிட்ட  நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில்,இஸ்மாயில் ஹனியே  படுகொலை சம்பவத்தால் இஸ்ரேல் தூத ரகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. தொடர்ந்து வியாழனன்று தில்லி பகுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்றும் விடுக்கப்பட்டதால், சனியன்று தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களில் பாதுகாப்பினை பலப்படுத்தியும், தூதரகத்துக்கு அருகே தில்லி போலீசார்  சோதனையிலும் ஈடுபட்டனர்.