புதுதில்லி கேரள மாநிலத்தின் வய நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்த நிலையில், இதனை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.,க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலங்களவை...
மாநிலங்களவை கூடியதும் வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு கள் குறித்து அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கவலை தெரி வித்த நிலையில், தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய மாநில அரசுகள் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை தொ டர்ந்து அவையில் சிபிஎம் உறுப் பினர் ஜான் பிரிட்டாஸ்,“வய நாட்டில் நிலச்சரிவு காரணமாக 4 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள் ளன. இதனால் அங்கு ராணு வத்தை அனுப்பி பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து சிபிஎம் மாநிலங்க ளவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம், “வெள்ளப்பெருக்கால் ஏற் பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் உயிரி ழப்புகளை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான நிதியை ஒன்றிய அரசு விரைவாக விடு விக்க வேண்டும்” என வலியுறுத்தி னார். அதே போல இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.,சந்தோஷ்,”வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்து விட்டது. மீட்புப்பணிகளை துரிதப் படுத்தி தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்”என கூறினார்.
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேசிய பின்பு மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர்,”வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர், பிரதமர் இருவரும் பேசி சூரிய உதயத்திற்கு முன்பே மீட்புப்பணியை தொடங்கி விட்டனர். இருவரும் ஒருங்கிணை ந்து செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என அவர் கூறினார்.
மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே மாநிலங்களவை யில்,”நிலச்சரிவில் சிக்கி இன்னும் எத்தனை பேர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளனர் என தெரிய வில்லை. வயநாட்டிற்கு ராணுவம் சென்றதா, மீட்புப் பணிகள் குறித்த தகவலை வெளிப்படையாக கூறவேண்டும். அவைத்தலைவர் நீங்கள் தகவல் கொடுக்கிறீர்கள்; அரசிடம் இருந்து தகவலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தேசிய பேரிடர் பற்றி வாய் திறக்காத ஒன்றிய அமைச்சர்கள்
அதன்பிறகு ஒன்றிய குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா,”வயநாடு துயரச் சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களை மீட்பது, உடல்களை மீட்டெடுப்பது மற்றும் அவசரகால உதவிகளை வழங்கு வது ஆகியவை முதன்மைத் தேவை. இந்த சோகத்தை நிவர்த்தி செய்வதில் நாம் அனை வரும் ஒன்று சேர்ந்து செயல் படுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு,”ஒன்றிய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இது அரசியலுக்கான தருணம் அல்ல. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நேரம். மறுவாழ்வு மற்றும் புனர மைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக் கையான தேசிய பேரிடர் பற்றி ஒன்றிய அமைச்சர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில்...
மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி மக்களவை யில்,“வயநாட்டில் மீட்பு மற்றும் மருத்துவ சேவைக்கு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். உயிரிழந்த வர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். முடிந்தால் இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். முக்கியமான போக்கு வரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுத்து, மக்களுக்கான நிவாரண முகாம் களை விரைவில் அமைக்க வேண்டும்” என கூறினார். இதே போல எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் வயநாட்டிற்கு ஒன்றிய அரசு உதவி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.