பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற 40 எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்துள்ள “இந்தியா” கூட் டணியில் தற்போது தொகுதி பங்கீடு தீவிரமாக நடை பெற்று வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தில்லி, உத்த ரப்பிரதேசம், ஹரியானா, கோவா, குஜராத், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்களில் “இந்தியா” கூட்டணியின் தொகுதி பங் கீடு முடிவடைந்த நிலையில், மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ் தான் மாநிலத்திலும் “இந் தியா” கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறு திக்கட்டத்தை எட்டியுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஆதிவாசி கட்சி (பிஏபி), ராஷ்ட்ரிய லோக்தந் திரிக் கட்சி (ஆர்எல்பி) ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி தலா ஒரு தொகுதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சிகார் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், துங்கர்பூர்-பன்ஸ் வாரா தொகுதி பாரதிய ஆதி வாசி கட்சிக்கும், நாகவுர் தொகுதி ஹனுமான் பெனி வாலின் ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சிக்கும் ஒதுக் கப்படுவதாகவும், இந்த வார இறுதியில் “இந்தியா” கூட்டணியின் தொகுதி பங் கீடு தொடர்பான இறுதி அறி விப்பு விரைவில் வெளியிடப் படும் என்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் வட்டா ரங்கள் தகவல்கள் தெரிவித் துள்ளன.
“இந்தியா” கூட்டணியில் உள்ள மொத்த கட்சிகளின் எண்ணிக்கை 40ஆக உயர்வு
“இந்தியா” கூட்டணி உருவான பொழுது கட்சி களின் எண்ணிக்கை 16 ஆக இருந்தது. இரண்டாம் கட்ட கூட்டங்களுக்கு பிறகு கூட்டணி கட்சி களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. பாஜக வின் மிரட்டலுக்கு அடிபணிந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக்தளம் ஆகிய கட்சிகள் “இந்தியா” கூட்டணியில் இருந்து வெளியேறின. இதனால் கூட் டணி கட்சிகளின் எண்ணிக்கை 26 ஆக குறைந்தது. அதன்பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு மாநில பிராந்திய கட்சிகள் “இந்தியா” கூட்டணியில் இணைந்தன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஓரளவு வலுவான வாக்குவங்கி கொண்ட பாரதிய ஆதிவாசி கட்சி (பிஏபி), ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) ஆகிய கட்சிகளும் தற்போது கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், “இந்தியா” கூட்டணி கட்சியின் மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.