கொல்கத்தா மருத்துவமனை யில் வன்கொலை தொ டர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பயிற்சி மருத் துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அக்குழுவில், துணை கடற்படை அதிகாரியும் மருத்துவருமான ஆர்.கே. சரீன், ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நேஷனல் நிறுவன இயக்குனர் டாக்டர் ரெட்டி, தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் எம். ஸ்ரீவாஸ், பெங்களூரு நிம் ஹான்ஸ் மருத்துவமனை டாக்டர். பிரதிமா மூர்த்தி, ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்து வர் டாக்டர் பூரி, கங்காராம் மருத்துவ மனையின் நிர்வாக உறுப்பினர் டாக்டர் ராவத், பண்டிட் பி.டி.சர்மா கல்லூரியின் உதவி முதல்வர் டாக்டர் அனிதா சக்சேனா மற்றும் சிறப்பு மருத்துவர்கள் டாக்டர் பல்லவி, டாக்டர் பத்மா ஸ்ரீவஸ்தவ் ஆகிய 10 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பணிக்குழுவின் அதிகாரப் பூர்வ உறுப்பினர்களாக இந்திய அரசின் கேபினட் செயலாளர், இந்திய அரசின் உள் துறை செயலாளர், ஒன்றிய சுகாதார அமைச்சக செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், தேசிய தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் இருப் பார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது.