india

img

கிராமப்புற மக்கள் 11 கோடி பேரின் வேலையைப் பறித்தது பாஜக அரசு!

புதுதில்லி, ஜன. 3 - மகாத்மா காந்தி தேசிய கிராமப் புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் வேலை செய்திடும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு, ஆதார் அட்டையின் அடிப்படையில் ஊதியம் வழங்குவதற்கு நிர்ணயித்திருந்த காலக் கெடுவை டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடித்துக் கொண்டதன் மூலம் மோடி அர சாங்கம், கோடிக்கணக்கான கிராமப் புறத் தொழிலாளர்களின் உரிமை களைப் பறித்துக் கொண்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு மேலும் கூறியிருப்பதாவது: இப்போது மோடி அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் சட்டத்தின் படி, மகாத்மா காந்தி தேசிய கிராமப் புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலை செய்திடும் ஒவ்வொரு கிராமப்புறத் தொழிலாளி யும் ஆதார் அட்டையின் அடிப்ப டையில் வேலை அட்டை (job card) வைத்திருக்க வேண்டும்,

அவ்வாறு வைத்திருக்கும் தொழிலாளிதான் குறைந்தபட்சம் 100 நாள் வேலை பெறும் உரிமை பெற்றிருப்பார். இந்தச் சட்டத்தின்கீழ் ஒன்றிய அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் முதல் விதி மீறல் என்பது, வேலை அட்டை வைத்திருப்பவர்களையே- ஆதார் அட்டை அடிப்படையில் வேலை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள தொழிலாளர்கள் (eligible workers) மற்றும் தகுதி  பெறாத தொழிலாளர்கள் (non- eligible workers) என்று பிரித்திரு ப்பதாகும். இதன்படி அரசாங்கத்தி டம் உள்ள கணக்கின்படி பதிவு செய்யப்பட்டுள்ள 25 கோடியே 25 லட்சம் தொழிலாளர்களில், 14 கோடியே 35 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே வேலைபெறுவதற்கு தகுதி  படைத்தவர்கள் ஆகிறார்கள். ஏனெனில், கடந்த மூன்று ஆண்டு களில் இவர்கள் மட்டுமே குறைந்த பட்சம் ஒரு நாளாவது வேலை செய்தி ருக்கிறார்கள்.

மற்ற அனைவரும் இனி இந்தச் சட்டத்தின்படி வேலை செய்வதற்குத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள். இனி அவர்கள் இந்தச்சட்டத்தின்கீழ் வேலை செய்ய முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தச் சட்டத்தின்கீழ் வேலை அட்டையைப் பெற்றிருப்பவர்களில் 10 கோடிக்கும் மேலான தொழிலாளர்களுக்கு இனி  வேலை செய்யும் உரிமைகிடையாது. எஞ்சியுள்ள 14 கோடியே 35 லட்சம் தொழிலாளர்களில், சுமார்  1 கோடியே 80 லட்சம் தொழிலாளர் களிடம் ஆதார் அட்டையின் அடிப் படையில் ஊதியம் பெறும் அட்டை பெற்றிராததால், அவர்களும் (12.7  விழுக்காட்டினர்), இனி வேலைசெய் வதற்கான தகுதியைஇழக்கிறார்கள். முன்பு, அரசாங்கம் இணை யத்தின் (on line) மூலம் தொழி லாளர்களைப் பதிவு செய்யும் முறையை வைத்திருந்தது.

இதில்  கிராமப்புற இந்தியாவின் பல பகுதி கள் இன்னமும் இணைக்கப்படாத தால், அல்லது மிகவும் மோசமான விதத்தில் கிராமப்புறங்களில் தொடர்பு வசதி இருந்ததால், வேலை  செய்யும் இடத்திற்கு வந்த பலருக்கு வேலை அளிப்பதற்கான உத்தரவை அளிக்க முடியவில்லை. எ

னவே  அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட வில்லை.   இது இச்சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் இதுவரை  100 நாட்கள்  மட்டுமே சில இடங்களில் வேலை  அளிக்கப்பட்டு அதுவே போதுமான தாக இருந்துவந்த நிலையிலும்கூட, அது ஒன்றுதான் நாட்டுப்புற ஏழை  மக்களுக்கு, குறிப்பாக வேலை யின்றித் தவித்து வந்த கோடிக்கணக் கான மக்களுக்கு, உயிர்நாடியாக இருந்து வந்தது.

இவ்வாறு நாட்டுப்புற மக்களின் உயிர்நாடியாக இருந்து வந்த இந்தச் சட்டத் தின்மீது, மோடி அரசாங்கம் தொழில்  நுட்பத்தைப் பயன்படுத்தித் தாக்கு தல் தொடுத்திருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தர வாதச் சட்டத்தின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த கிராமப்புற தொழிலாளர்களின் உரிமைகள் மீது சட்டத்திற்கு விரோதமாகத் தாக்கு தல் தொடுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆதார் அட்டையுடன் இணைத்து ஊதியம் வழங்கும் முறையுடன் இச்சட்டத்தை இணைத் திடும் உத்தரவை ரத்து செய்திட வேண்டும் என்று கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (ந.நி.)