india

img

அடுத்தடுத்து தங்கம், வெள்ளி வென்று சாதனை நீரஜ் புதிய வரலாறு!

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிச் சுற்று இந்திய நேரப்படி வியாழனன்று நள்ளிரவு நடைபெற்றது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீரரும், ஒலிம்பிக் பதக்க நாயகனுமான நீரஜ் சோப்ரா தகுதி சுற்றில் முதலிடம் பிடித்ததால் டோக்கியோ ஒலிம்பிக் தொடரைப் போலவே பாரீஸிலும் தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் தொடரில் அடுத்தடுத்து தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார்.