பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் அமைத் துள்ளது இந்து பனாரஸ் பல்கலைக்கழக ஐஐடி. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வார ணாசியில் அமைந்துள்ள இந்த ஐஐடி வளாகத்தில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதியன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் ஐஐடியில் பயி லும் மாணவியை பாலியல் வன் கொமை செய்து நிர்வாணமாக ஐஐடி வளாகத்தில் ஓட விட்டு வீடியோ எடுத் துள்ளனர். இந்த சம்பவம் தொடர் பாக வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளதாகவும், குணால் பாண்டே, ஆனந்த் என்ற அபிஷேக் சவுகான் மற்றும் சக்ஷாம் படேல் என அடை யாளம் காணப்பட்டுள்ளதாகவும் லங்கா சரக காவல் நிலைய அதிகாரி சிவ காந்த் மிஸ்ரா தெரிவித்தார்.
வழக்கம் போல குற்றவாளிகளை பாதுகாத்த பாஜக
பெயர் அறிவிக்கப்பட்டாலும் சம்ப வம் நடந்து ஒன்றரை மாத காலம் ஆகியும் குற்றவாளிகளை கைது செய் யாமல் இருந்தது தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளப்பியது. பாலி யல் பலாத் காரம் செய்தவர்கள் பாஜக வைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் களை இன்னும் கைது செய்யப் படாமல் இருப்பதாக ஐஐடி மாண வர்கள் புகார் அளித்தனர். விரைவில் போராட்ட அறிவிப்பு வெளியான நிலையில், ஆளும் மாநில பாஜக அரசு 2 மாத காலத்திற்கு பிறகு குணால் பாண்டே, ஆனந்த் என்ற அபிஷேக் சவு கான் மற்றும் சக்ஷாம் படேலை கைது செய்தது. இதில் குணால் பாண்டே மற்றும் சக்ஷாம் படேல் ஆகியோர் மோடியின் தொகுதியான வார ணாசியின் பாஜக ஐடி விங் உறுப்பி னர்களாக உள்ள நிலையில், பாஜக விற்கு வேண்டப்பட்டவர்கள் என்ப தால் தான் 2 மாத காலம் குற்றவாளி களை கைது செய்யாமல் உத்தரப்பிர தேச போலீசார் அவர்களை காப்பற்ற திட்டம் வகுத்துள்ளனர். மாணவர் களின் போராட்ட அறிவிப்பாலும், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டும் உத்தரப்பிரதேச போலீ சார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் ஆதித்யநாத்திற்கு நெருக்கமானவர்கள்
ஐஐடி வளாகத்தில் மாணவி பாலி யல் பலாத்காரம் செய்த குற்றவாளி களில் குணால் பாண்டே பாஜக தக வல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கி ணைப்பாளர், சாக்ஷம் படேல் பாஜக தலைவர் திலீப் படேலின் உதவியா ளர் ஆவார். இருவரும் வாரணாசி யின் பாஜக ஐடி விங் உறுப்பினர் களாக பிரச்சார வேலைகளை கவ னிப்பவர்கள் என்பதால், மோடி மற் றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு மிக நெருக்கமான வர்கள் என தகவல் வெளியாகியுள் ளது. இருவரும் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் ஆதித்யநாத் உடன் புகைப்படம் எடுத்து வாழ்த்து பெற் றுள்ளனர். வாரணாசிக்கு மோடி மற்றும் ஆதித்யநாத் வருகை தந் தால் குணால் பாண்டே மற்றும் சக்ஷாம் படேலின் தலை தான் முதன்மையாக தெரியும். அந்தளவுக்கு பிரச்சாரம் தொடர்பான வேலைகளில் பாஜக மூலம் வாரணாசியில் செல்வாக்காக வலம் வரும் நிலையில், அதே செல் வாக்கு மற்றும் அதிகாரத்துடன் ஐஐடி வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஊடகங்கள் விவாதங்கள் நடத்துமா?
பாஜகவை சேர்ந்தவர்கள் என்ப தால் இவர்களை கைது செய்வதற்கு 60 நாட்கள் ஆகியுள்ளது. யார் தந்த அழுத்தத்தினால் இவ்வளவு தாமதம் ஆனது? ஊடகங்கள் இதுகுறித்து விவாதங்கள் நடத்துமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா.