ஜனவரி 7 ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கதேச தேர்தல் பிரதான எதிர்க்கட்சியின் புறக்கணிப்புக்கு இடையே 42 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 40 சதவீத வாக்கு பதிவுகளுடன் முடிவடைந்த நிலை யில் திங்கள் கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் தலைமை தேர்தல் ஆணையர் கொடுத்த பேட்டியில் 28 சதவீத வாக்குப்பதிவு என கூறிய சிறிது நேரத்தில் 40 சதவீதவாக்குகள் பதிவாகி யுள்ளது என தெரிவித்தார்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மற்றும் அதன் கூட்டணிகள் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வென்று பெரும்பான்மையைப் பெற்றதையடுத்து, ஐந்தாவது முறையாக வங்கதேச பிரதம ராக ஹசீனா பதவியேற்றுள்ளார். இதன் மூலம் உலகளவில் தேர்தல் ஜனநாய கத்தில் ஒரு அரசிற்கு மிக நீண்ட காலமாக தலைமை வகித்த பெண் தலைவ ராக இடம்பெற்றுள்ளார். 1975 ஆம் ஆண்டு இராணுவ சதியில் வங்கதேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் படுகொலை செய்யப் பட்டனர்.
அவரது மகளான ஷேக் ஹசீனா 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் வங்கதேசத்தின் பிரதமரானது குறிப்பி டத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில் அவர் போட்டியிட்ட கோபால்கஞ்சி தொகு தியில் சுமார் 2,49,962 வாக்குகளைப் பெற்றுள்ளார் ஹசீனா. அவருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் 469 வாக்குகளை மட்டுமே பெற்றார். கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் மிகப்பெரிய மற்றும் முக்கிய துறையாக ஆயத்த ஆடைத் தொழிற் சாலைகளை கொண்டு வந்த ஹசீனா அண்டை நாடான மியான்மரில் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்ட ரோஹிங்கி யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து சர்வதேச அளவில் பாராட்டு களைப் பெற்றார்.
ரஷ்யா-உக்ரைன் போரால் எரி பொருள் மற்றும் உணவு இறக்குமதியின் விலைகள் கடுமையாக உயர்ந்ததில் இருந்து பல நாடுகளை போல வங்கதேச பொருளாதாரமும் கடுமையாக மந்தமடைந் துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தில் 470 கோடி டாலர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 9.5 சதவீதமாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் 5 ஆவது முறையாக பிரதமராகும் ஹசீனா அரசாங்கத்திடம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் வரியைக் குறைத்து ஏழை மக்களுக்கு மானியம் வழங்குதல் என்ற மக்களின் எதிர்பார்ப்புகள் உள்ளன.
தற்போது அவாமி லீக் மீண்டும் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து வெற்றி ஊர்வலம் எதுவும் நடத்த வேண்டாம் என்று கட்சித் தலை வர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆதர வாளர்களுக்கு ஹசீனா அறிவுறுத்தி யுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங் கள் தெரிவித்துள்ளன.