india

img

“மணிப்பூரை பிளவுபடுத்தும் மதவெறி சக்திகள்”

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தபின் மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி., அங்கோம்சா பிமோல் அகோய் ஜாம்,”மணிப்பூரை மதவெறி சக்திகள் பிளவுபடுத்துகின் றன” எனக்குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசு கையில், “மணிப் பூர் மாநிலத்தில் சமாதான முயற்சி கள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. முதல்படியாக ஜிரிபாம் மாவட்டத்தில் இரண்டு சமூகங்களால் (குக்கி- மெய்டெய்) ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. பாது காப்புப் படையினரின் மத்தியஸ்தால் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், துரதிர்ஷ்ட வசமாக பிளவுபடுத்தும் வகுப்புவாத மற்றும் மதவெறி சக்திகளால் இந்த உடன்பாடு தகர்க்கப்பட்டது. இத்தகைய மதவெறி சக்திகளால் கடந்த 14 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் நெருக்கடியை சந்தித்து வருகிறது.  மணிப்பூரைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. அதனால் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சக்தி களுக்கு எதிராக ஒன்றிய அரசு கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.