india

img

“ஒரே தேர்தல்” திட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரல் சம்யுக்த கிசான் மோர்ச்சா எச்சரிக்கை

ஒன்றிய அரசின் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா, மாநில அரசு களின் சுயாட்சி மற்றும் கூட்டாட்சி உரிமைகளை பறித்து, கார்ப்பரேட் நிறு வனங்களின் சுரண்டலுக்கு வழி வகுக்கும் என விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு கடுமையாக எச்ச ரித்துள்ளது.

இதுதொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது,”மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா நாடாளுமன்ற ஜனநாயக முறையையும், நாட்டின் கூட் டாட்சி கட்டமைப்பையும் சீர்குலைக்கும். 

இந்த தேர்தல் மசோதா மட்டுமின்றி 2017இல் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி முறை, மாநிலங்களின் வரி விதிப்பு உரி மையை பறித்ததாகவும், பெட்ரோலியப் பொருட்கள், மது மற்றும் கனிமங்கள் தவிர்த்து பிற அனைத்திலும் வரி விதிக்கும் உரிமையை மாநிலங்கள் இழந்துள்ளது. மேலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட “டிஜிட்டல் விவசாய திட்டம்”, “தேசிய கூட்டுறவு கொள் கை” மற்றும் “விவசாய சந்தைக்கான கொள்கை கட்டமைப்பு” உள்ளிட்டவை களும், ஏற்கனவே திரும்பப் பெறப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை மறை முகமாக மீண்டும் கொண்டு வரும் முயற்சி ஆகும்.

இந்திய அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின்படி விவசாயம், தொழில், கூட்டுறவு மற்றும் நிலம் ஆகி யவை மாநில பட்டியலில் உள்ளன. ஆனால் புதிய விவசாய சந்தை கொள்கை கட்டமைப்பு, குறைந்தபட்ச ஆதார விலை குறித்து மவுனம் சாதிப்பதோடு, டிஜிட்டல் மயமாக்கல், ஒப்பந்த விவசாயம் மற்றும் கொள்முதல் மூலம் கார்ப்பரேட் கட்டுப்பாட்டை அனு மதிப்பதாக உள்ளது. அதே போல அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முன்மொ ழிவு, பரவலாக்கப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரத்தின் நோக்கத்திற்கே எதி ரானது ஆகும்.\

இதனால் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவுக்கு எதிராக அணிதிரளு மாறு விவசாயிகள் மற்றும் தொழிலா ளர்களுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா  அழைப்பு விடுக்கிறது. மேலும் குறைந்த பட்ச ஆதார விலை, குறைந்தபட்ச ஊதி யம், வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் கடன் சுமை போன்ற வாழ்வாதார பிரச்சனைகளில் மக்களை அணிதிரட்டுமாறு எதிர்க்கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.