india

img

தேர்தல் நடத்தப்பட்ட விதம் கவலை அளிக்கிறது! - முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

தேர்தல் நடத்தப்பட்ட விதம் கவலை அளிக்கிறதாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும்  தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து கவலை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி, சி.டி.செல்வம், எஸ்.விமலா உள்ளிட்ட 7 நீதிபதிகள் கூட்டாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
தேர்தலை நியாயமாக நடத்த பலமுறை வலியுறுத்தியும், தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யவில்லை; வாக்கு எண்ணிக்கையின்போது விபரீத சூழல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்; தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்; வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட விடாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்.

;