புதுதில்லி
சட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்து மனுஸ்மிருதி நீக்கம்
தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இளங்கலை சட்ட படிப்பில், ஜூரிஸ்ப்ரூடன்ஸ் (சட்ட முறை) என்ற தாளில் “மனுஸ்மிருதி” அறி முகப்படுத்த இருப்ப தாக தகவல் வெளி யானது. இது புதிய கல்விக்கொள்கையின் ஒரு அங்கம் என்று கூறி, தில்லி பல்கலைக்கழ கத்தின் “சமூக ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணி” கடுமையாக எதிர்த்தது.
இது குறித்து ஆசிரியர் முன்னணி தில்லி பல்கலைக்கழக துணை வேந்த ருக்கு எழுதியிருந்த கடிதத்தில்,“மனுஸ் மிருதியின் பல பிரிவுகளில் பெண்களின் கல்வி மற்றும் சம உரிமைகள் எதிர்க்கப்பட் டிருக்கிறது. மனுஸ்மிருதியின் எந்தப் பிரி வையும் அல்லது பகுதியையும் அறிமு கப்படுத்துவது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பின் கொள் கைகளுக்கு எதிரானது” என்று கூறியி ருந்தது. அதேபோல இடதுசாரி மாணவர் அமைப்பினரும் கடும் போராட்டங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஆசிரியர்களின் எதிர்ப்பு, மாணவர்களின் போராட்டம் கார ணமாக,”சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படும். பாடத் திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங் கள் குறித்து ஆசிரியர்கள் சிலர், சில அம் சங்களை முன்வைத்திருந்தனர். அதில் ஒன்றுதான் மனுஸ்மிருதியை இணைப் பது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டி ருக்கிறது. இதுபோன்ற எதுவும் மாணவர்க ளுக்கு கற்பிக்கப்பட மாட்டாது” என தில்லி சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் சிங் தனது அறிக்கை யில் கூறியுள்ளார்.
அமராவதி
ஜெகன்மோகன் மீது கொலை முயற்சி வழக்கு
ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ வான ரகுராம கிருஷ்ண ராஜு கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. ஜெகன் மோகன் மட்டுமில்லாமல், இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற காவல் துறை யினர் மீதும் இதே கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சிம்லா
ஆதார் அட்டையுடன் வந்தால் மட்டுமே அனுமதி
பாஜக எம்.பி. கங்கனா நிபந்தனை
நடந்து முடிந்த மக்களவைத் தேர்த லில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
இந்நிலையில், தொ குதி மக்கள் தன்னைக் காண விரும்பினால் ஆதார் அட்டையுடன் வருமாறு கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார். இதுகுறித்து அவர், “இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய மாநிலம். சிரமத்தை சந்திக்கக் கூடாது என்பதற்காகவே ஆதார் அட் டையுடன் வரவேண்டும். என்னை சந்திப் பதற்கான காரணத்தையும், தொகுதிக ளின் பிரச்சனைகளையும் காகிதத்தில் எழுதி வரும்படி மக்களிடம் கேட்டுக்கொள் கிறேன்” எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
கங்கனாவின் இந்த நிபந்தனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. “கங்கனா ஒரு மக்கள் பிரதிநிதி. எனவே, மாநிலத்தின் ஒவ் வொரு பகுதி மக்களையும் சந்திப்பது அவரது பொறுப்பு. எந்தவித பணியாக இருந்தாலும் சரி, அல்லது கொள்கை விஷயம், தனிப்பட்ட வேலை என எது வாக இருந்தாலும் மக்கள் அவரை எந்த வித அடையாளமும் இல்லாமல் சந்திக்க லாம். தன்னை சந்திக்க வரும் மக்களை குறிப்பிட்ட ஆவணங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே சந்திப்பேன் எனக் கூறுவது சரியல்ல” என இமாச்சல் காங்கி ரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி
பழைய அவசர நிலை பாஜகவின் புதிய அஸ்திரம்!
காங்கிரஸ் கண்டனம்
“அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்ட ஜூன் 25ஆம் தேதி இனி “அரசியலமைப்பு படுகொலை தினம்” ஆக கடைப்பிடிக்கப்படும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் தெரி வித்திருந்தார். இந்த அறிவிப்பை பிரதமர் மோடி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து,இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதை “அரசிய லமைப்பு படுகொலை தினம்” நினைவு படுத்தும். காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடி நிலை காரணமாக ஏற்பட்ட இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக இது இருக்கும்” என கூறினார்.
ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
பிரதமர் மோடியின் கருத்திற்கு காங்கி ரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பதிவில் அவர் கூறுகையில்,”மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது. 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசர நிலையை பிறப்பித்தவர் மோடி. தேர்தலில் மக்கள் அவருக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கினர். தேர்தல் முடிவுகள் வெளி யான ஜூன் 4 மோடியிடமிருந்து விடுதலை பெற்ற நாளாக வரலாற்றில் பதிவாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் கொள்கைகள், மாண்புகள் மற்றும் நிறுவ னங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திய பிரதமர் இவர். இந்திய அரசி யல் சாசனம் மனுஸ்மிருதியிலிருந்து உத்வேகம் பெறவில்லை என்பதால் அதனை நிராகரிக்கிறோம் என கூறிய வர்களின் கருத்தியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். மனிதர் மூலம் பிறப்பெ டுக்காத பிரதமருக்கு, டெமாக்ரசி (நாற்காலி -ஆட்டம்) என்பது டெமோ-குர்சி மட்டுமே” என்று விமர்சித்துள்ளார்.