india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரிலையன்ஸ், ஹாட்ஸ்டார் டிஸ்னி பிளஸ், ஸ்டார் இந்தியா இணைப்புக்கு இந்தியா போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ரிலையன்ஸ் டிஸ்னி கூட்டு நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி என்ற நிலையில், ரிலைன்ஸ் நிறு வனம் மட்டும் ரூ.11,500 கோடி அளவில் முதலீடு செய்துள்ளது.

ரூ.6,456 கோடி மதிப்பில் ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்க ளில் 3 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தின் சிந்த குண்டா மற்றும் ராயச்சோட்டி ஆகிய 2 இடங்க ளில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். 

அருணாச்சலப் பிரதேச மாநிலம் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் பலி யாகினர்.

தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநராக பி. சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரில் 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பி. சீனிவாசன் நாட்டின் தீவிரவாத எதிர்ப்புப் படையான தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குனர் ஜெனரலாக ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேசமே விழித் தெழ வேண்டிய நேரம் இது” என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கொச்சி

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை
அனைத்து குற்றவாளிகள் பெயர்களும் வெளியிட பெப்கா வலியுறுத்தல்

மலையாள திரையுலகில் பாலியல் சுரண்டல் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரது பெயர்களையும் வெளியிட வேண்டும் என்று கேரள திரைப்பட ஊழியர் சம்மேள னம் (பெப்கா - FEFKA) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெப்கா கூறுகை யில், ‘குற்றம் நிரூபிக்கப்பட்டால் பெப்கா உறுப்பினர்கள் மீது அவர்களில் சிறிய வர், பெரியவர் என அளவு பாராமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற அமைப்புகளில் உள்ளவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க பெண் உறுப்பினர்கள் கொண்ட முக்கிய குழு பணிக்கப்படும். திரைத் துறையில் நடக்கும் பாலியல் குற்றங் களை விசாரிக்க சிறப்புக் குழுவை நிய மித்துள்ளதை வரவேற்கிறோம். மகளிர் மையக் குழுவால் தயாரிக்கப்பட்ட வழி காட்டுதல்கள் அமைப்புகளின் செயற் குழுக்களால் விரிவாக விவாதிக்கப் படும். மேலும் தயாரிக்கப்பட்ட பகுப் பாய்வு அறிக்கை அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.