india

img

மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள்! - ராகுல் காந்தி

மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள் என்றும், பாஜகவினர் தேசபக்தர்கள் அல்ல துரோகிகள் என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காட்டமாக பேசியுள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள் என்றும், பாஜகவினர் தேசபக்தர்கள் அல்ல துரோகிகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது: "நான் மணிப்பூருக்கு சென்றேன். பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை. பிரதமர் மோடியைப் பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவில் ஒரு பகுதி அல்ல. மணிப்பூரை இரண்டாக பிரித்துவிட்டார் பிரதமர். மக்களின் குரலாக இந்தியா உள்ளது. மணிப்பூரில் அந்தக் குரலைக் கொன்றுவிட்டீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தான் மணிப்பூர் மக்களை கொன்றீர்கள். இந்தியாவை கொன்றீர்கள். நீங்கள் துரோகிகள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல. இந்திய ராணுவத்தால் ஒரே நாளில் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியும். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தியாவின் குரலுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை.
மணிப்பூரில் பாஜக இந்தியாவை கொன்று குவித்துள்ளது; முதலில் மணிப்பூர் எரிந்தது, தற்போது அரியானா எரிகிறது. ஒட்டுமொத்த நாட்டையும் எரிக்க நீங்கள் விரும்புகிறீர்கள்." இவ்வாறு பேசினார்.