காசநோய் தடுப்பில் கேரளத்துக்கு தேசிய விருது
திருவனந்தபுரம், பிப்.14- கேரள சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சிறந்த காசநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான விருது பெற்றது. தனியார் துறையில் தேசிய காசநோய் தடுப்பு நடவடிக்கைகளின் (என்டிஇபி) சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் நிக்சய் போர்ட்டல் மூலம் அதிக நோயாளி களை பதிவு செய்ததற்காக இந்த விருது வழங்கப்படு கிறது. 2019 ஆம் ஆண்டில், தனியார் துறையிலிருந்து 4615 காசநோயாளிகள் நிக்சய் போர்ட்டலில் பதிவு செய்யப் பட்டுள்ளனர்,
அதே நேரத்தில் 2023 இல் அது 6542 ஆக அதிகரித்துள்ளது. தனியாரின் பங்களிப்பை உறுதி செய்து 2025-ஆம் ஆண்டுக்குள் கேரளாவை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்ற மாநில அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். தற்போது மாநிலத்தில் 330 ஸ்டெப்ஸ் மையங்கள் (தனியார் துறை யில் காசநோய் ஒழிப்பு அமைப்பு) செயல்பட்டு வரு கின்றன. ஸ்டெப்ஸ் என்பது தனியார் மருத்துவமனை களை பொதுத்துறை அமைப்புடன் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கும் மையங்களாகும்.
இங்கு சிகிச்சைக்காக வரும் காசநோயாளிகளுக்கு நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் உயர்தர மருந்து களை உறுதி செய்யும் வகையில் செயல்படுகிறது. இது நாட்டிற்கு முன்மாதிரியான மாநில திட்டமாகும். தற்போது எர்ணாகுளம், வயநாடு மற்றும் திரு வனந்தபுரம் மாவட்டங்களில், கொச்சி கப்பல் கட்டும் தளம் மற்றும் கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனி யார் நிறுவனங்களுடன் இணைந்து மற்ற மாவட்டங்களி லும் சத்துணவுப் பொருட்கள் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓடும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.என்.பிரசாத் மறைவு