india

img

ஐசிசி தலைவராக ஜெய்ஷா தேர்வு - பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரராக இந்தியா உருவாக்கிய மிகப்பெரிய லெஜெண்ட் ஜெய்ஷா என்று திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா, புதிய ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரராக இந்தியா உருவாக்கிய மிகப்பெரிய லெஜெண்ட் ஜெய்ஷா என்று திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது: “பேட்ஸ்மேன், பவுலர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அற்புதமான ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரராக இந்தியா உருவாக்கிய மிகப்பெரிய லெஜெண்ட் ஜெய்ஷா, ஐசிசியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவோம்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.