india

img

110 முறை முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் மோடி வெறுப்புப் பேச்சு

18ஆவது மக்க ளவை தேர்த லில் நரேந்திர மோடி தோல்வி பயத்தால், தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து   இழிவான வகையில் வெறுப்புப் பிரச்சாரத் தில் ஈடுபட்டார். குறிப்பாக முஸ்லிம்களை அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் என்றும், பெண்கள் தாலி குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் வெறுப்பைக் கக்கினார்.

இந்நிலையில், “மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி 100 முறைக்கும் மேலாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்துள்ளார்” என தன்னார்வ தொண்டு நிறுவனமான மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறி யுள்ளது. இதுதொடர்பாக “வெறுப்பு பேச்சை தூண்டிய பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம்” என்ற தலைப் பில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த  மார்ச்  16 அன்றுக்குப் பின்னர் பிரதமர் மோடி 173 பிரச்சாரக் கூட்டங்களில் பேசியுள்ளார். அதில் 110 முறைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளார் மோடி. தனது  அரசியல் எதிரிகளை இஸ்லாமியர் களின் உரிமைகளுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதாக பிரச்சாரத்தில் அவர் குற்றம்சாட்டி உள்ளார். இது போன்ற தகவல்கள் மூலம் பெரும்பான்மை யாக இந்து சமூகத்தி னர் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதே பிரதமர் மோடியின் நோக்கமாக இருந்தது. மேலும் பாஜகவினர் பெரும்பாலும் முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மை யினருக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பியுள்ளனர்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.