india

img

குடிமக்களுக்கு ஊட்டச் சத்தான உணவு

புதுதில்லி, ஆக. 3 - குடிமக்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்குவதில் வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மாலத் தீவுகள் ஆகிய நாடுகளை விடவும் இந்தியா மோசமான நிலையில் இருப்பது ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் மைக்கான அமைப்பு, உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலவரம் என்ற அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. உலக நாடுகளில் பசியால் தவிப்பவர்கள் பற்றிய விபரங்கள் மட்டுமின்றி, உணவு கிடைத்தாலும், அது  போதிய ஊட்டச்சத்து உள்ளதாக இல்லா மையால் நலக்குறைவுகள் ஏற்படுவதால், அதைப் பற்றிய புள்ளி விபரங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

79 கோடி இந்தியர்களுக்கு சத்தான உணவு இல்லை!

2022 நிலவரப்படி, 55.6 சதவிகித மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற முடியாத அளவுக்கு இந்தியாவின் விலைவாசியும், வறுமையும் தடுப்பதாக கடந்த ஜூலை 24 அன்று வெளியான, இவ்வாண்டுக்கான அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.  ஆனால், அவ்வாறு ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள உணவைப் பெறுபவர்களின் அளவு, மாலத் தீவுகளில் வெறும் 1.6 சதவிகிதமாகவும், பூடானில் 5.3 சதவிகிதமாகவும், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் 41.1 சதவிகிதமாகவும், வங்க தேசத்தில் 48.2 சதவிகிதமாகவும் உள்ளது. ஆப்பிரிக்க நாடான எத்தியோப் பியாவில் கூட இந்த விகிதம் 54.1 சத விகிதம் தான்என்பது, இந்தியா எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.

இந்தியாவின் இந்த 55.6 சதவிகிதம் பேர், சற்றேறக்குறைய 79 கோடி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் போதிய ஊட்டச்சத்து அளிக்கும் உணவுகளைப் பெற முடியாமல் உள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

மாமிசம், காய்கறி, பருப்பு  விலைவாசி முக்கிய காரணம்

உண்மையில் உலகின் மிகப்பெரிய இலவச உணவு தானியத் திட்டம் இந்தியா வில்தான் நடைமுறையில் உள்ளது. அதன்படி சுமார் 81 கோடி மக்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் வழங் கப்படுகின்றன. உணவு தானியங்கள் வெறும் மாவுச்சத்தை மட்டுமே வழங்க  முடியும். ஆரோக்கியமான உடல் நலத் திற்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை காய்கறிகளிலிரு ந்தும், புரதம், கொழுப்பு ஆகிய சத்துகள்  மாமிசம், பால் பொருட்கள், பருப்பு வகை கள் ஆகியவற்றிலிருந்தும் தான் கிடைக்க வேண்டும். ஆனால், காய்கறிகளின் விலை வாசிகூட, எளிய மக்கள் அணுக முடியாத அளவுக்கு அதிகமாகவே இருப்பதால்தான் இவ்வளவு மோசமான ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவுகிறது. 

இந்தியாவின் நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிக மானோருக்கு, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவை உட்கொள்வதே நோய்க்கான காரணமாக இருப்பதாக, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் துணை அமைப்பான, ஊட்டச்சத்துக்கான தேசிய நிறுவனம் கடந்த மே மாதத்தில் எச்ச ரித்தது. எளிய மக்களின் உணவில் 50-இ லிருந்து 70 சதவிகிதம் வரை, உணவு தானியங்கள் மட்டுமே இருப்பதாகவும், பிற சத்துகளை அளிக்கும் உணவுகள், அதாவது காய்கறிகள், மாமிசம், பருப்பு  போன்றவை, எடுத்துக் கொள்ள வேண்டிய அளவில் பாதியளவு கூட எடுத்துக் கொள்ளப் படுவதில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. இலவசமாக வழங்கப் படும் உணவு தானியங்கள் பசியைத் தீர்க்க உதவினாலும், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்காமல் விலைவாசி உயர்வு தடுக்கிறது என்பதுதான் உண்மை நிலை யாக இருக்கிறது.

இரத்தச்சோகை பெண்களின் எண்ணிக்கை 9% அதிகரிப்பு

ஆண்களுக்குப் போதிய உணவை அளித்த பின்னரே பெண்கள் உண்ணும் பழக்கம் நம் நாட்டில் உள்ள நிலையில், விலைவாசி உயர்வு போன்றவற்றால் உணவை அதிகம் குறைத்துக்கொள்வது பெண்கள்தான். 

அதனால், இந்தியாவில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2012-இல்  இருந்ததை விட, 2022-இல் 9 சதவிகிதம் அதி கரித்திருக்கிறது. அதன் விளைவாக, எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, உலகின் மிகவும் பின் தங்கிய, ஏழை நாடுகளை விடவும் இந்தி யாவில் அதிகமாக இருக்கிறது. உலகிலே யே மிகவும் பின்தங்கிய பகுதியாகக் கருதப்படும் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகளிலேயே சராசரியாக ஒரு கோடிக்கு 54 குழந்தை கள் எடைக் குறைவாகப் பிறக்கிற நிலை யில், இந்தியாவில் 63 என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. அத்து டன் வேறு உணவுகளை வாங்க வசதி யில்லாமல், தாய்ப்பால் மட்டுமே அளிக்கப் படுகிற கைக்குழந்தைகளின் எண்ணிக்கை யும், இந்தப் பத்து ஆண்டுகளில் 22 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்பது, மக்களின் நல்வாழ்வில் மோடி அரசு எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கையில் தள்ளிய மோடி அரசு

இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுவதை மிகப்பெரிய சாதனை யாக மோடி அரசு குறிப்பிட்டுக் கொண்டா லும்கூட, ஒருபுறம் அது போதுமான அள வாக இல்லை என்பதும், மறுபுறம் தேவை யான ஊட்டச்சத்துகளை அளிக்க முடிய வில்லை என்பதும் கவலைக்குரியவை. அப்படியான ஊட்டச் சத்துக் குறைவான உணவே உடல் பருமனுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிற ஐ.நா. அறிக்கை,  இந்தப் பத்தாண்டுகளில் உடற்பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில 112 சதவிகிதம் அதிகரித்திருக் கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பருமனாக உள்ளவர்கள் தேவைக்கு அதிக மாக உணவு உட்கொள்பவர்கள் என்பது போன்ற பார்வை பொதுவாக நம்மிடையே இருந்தாலும், தேவையான ஊட்டச்சத்து ள்ள உணவுகள் கிடைக்காமையே பரு மனுக்கு முக்கியக் காரணம் என்று இன்றைய மருத்துவ உலகம் பார்க்கிறது. அதனாலேயே ஐ.நா. அறிக்கைகூட, இந்தியாவில் உடற்பருமன் அதிகரிப்பை கவலையோடு சுட்டிக்காட்டுகிறது.

மொத்தத்தில், ஊட்டச் சத்துக் குறை பாடு, உடற்பருமன், பெண்களிடையே இரத்த சோகை, எடைக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் என்று அனைத்து வகையிலும் ஆரோக்கியமற்ற வாழ்வாக எளிய மக்களின் வாழ்வை மோடி அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.

- அறிவுக்கடல்