india

சமூக பாகுபாடுகளால் நாளும் செத்துப் பிழைக்கும் அவலம்

புதுதில்லி, பிப். 11 - உலகிலேயே அதிக விதவைகள் வாழும் நாடாக இந்தியா மாறி யுள்ளது. 2023 மார்ச் 7 தகவலின்படி இந்தியாவில் 55 மில்லியனுக்கும் (சுமார் 5 கோடியே 50 லட்சம்) அதிகமான விதவைகள் வாழ்கின்றனர் என தெரியவந்துள்ளது. கணவனை இழந்த பிறகு,  பாகுபாடு, களங்கம், பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் தீங்கு விளை விக்கும் பாரம்பரிய நடைமுறைகள் போன்ற பிரச்சனைகளை வாழ்நாள் முழுவதும் விதவைகள் எதிர்கொள் கின்றனர்.

“உலகளவில் மூன்று விதவை களில் ஒருவர், இந்தியா அல்லது சீனா வில் வாழ்கின்றனர். 46 மில்லியன் விதவைகளைக் கொண்ட இந்தியா, சீனாவை (44.6 மில்லியன்) பின்னுக்கு தள்ளி, அதிக எண்ணிக்கையிலான விதவைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது” என்று 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று, ‘உலகப் பொருளா தார மன்றம்’ (World Economic Forum) தனது இணையதள பக்கத்தில்  தெரிவித்துள்ளது. இந்தியாவில் 40 மில்லியன் வித வைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள் ளது. நாட்டின் பெண் மக்கள் தொகை யில் இது 10 சதவிகிதம் என்று ‘மா டர்ன் விண்டோஸ் கிளப்’ (Modern Windows clup) இணையதளமும் கூறி யிருந்தது.

இந்நிலையில்தான், கடைசியாக  2023 மார்ச் 7 அன்று புள்ளிவிவ ரம் வெளியிட்ட ‘தி ஹூமானிட்டி’  (The Humanity) இணையதளமும் “இந்தியாவில் 55 மில்லியனுக்கும் அதி கமான விதவைகள் வாழ்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.  மேலும், “கணவனை இழப்பதால் ஏற்படும் துக்கம் மற்றும் நிதி இழப்பைக் கையாளும்போது, ​​​​இந்தப் பெண்களில் பலர், ‘சமூக மரணம்’ என்று விவரிக்கப்படும் மரபு களுக்கு இணங்க அழுத்தம் கொடுக்கப் படுகிறார்கள்.

திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இருந்து விலக்கப்பட்டு, ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக வீடுகளில் முடக்கி வைக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் களங்கம் கொண்ட வையாக உள்ளன. சில தொலைதூர கிராமங்களில், விதவைகள் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தங்குமிடங்களுக்கு (உ.பி. மாநி லத்திலுள்ள பிருந்தாவனம் போன்ற  இடங்களுக்கு) அனுப்பப்படு கிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 258 மில்லியன் விதவைகள் உள்ளனர்.