மதுபானக் (கலால்) கொள்கை வழக்கு தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் வியாழனன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் விதிக் கப்பட்டுள்ளது. இந்த அமலாக்கத் துறை காவல் மார்ச் 28 அன்று நிறைவு பெறும் சூழலில், சிறையில் இருந்தே அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி மாநில நிர்வாகப் பணியை சனியன்று இரவு முதல் தொடங்கிய தாகவும், குடிநீர், கழிவு நீர் சேவை தொடர்பாக உத்தரவுகளை பிறப் பித்ததாகவும் தில்லி அமைச்சர் அதிஷி ஊடகங்கள் முன்பு தெரி வித்துள்ளார்.
இந்நிலையில், திங்களன்று கெஜ்ரிவாலிடம் இதுதொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட விசா ரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகா ரம் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில், “அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு அமலாக்கத்துறை அலுவ லகத்தில் இருந்து கணினியோ, காகி தமோ எதுவும் கொடுக்கப்பட வில்லை. இவ்வாறு இருக்கையில் அவர் எவ்வாறு உத்தரவுகளை பிறப் பித்தார் என்பதற்காகவே விசா ரணை மேற்கொண்டோம்” என கூறப்பட்டுள்ளது.