1967இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங் கிய சரத் பவார் 1999 வரை அக்கட்சி யில் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுது மகாராஷ்டிரா முதல் வராக இருந்த சரத் பவார், தலைமை யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கார ணமாக 24 ஆண்டுகளுக்கு முன் 1999 ஜூன் 10இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தேசியவாத காங்கி ரஸ் கட்சியை தொடங்கினார். மகா ராஷ்டிராவில் முக்கிய பிராந்திய கட்சி யாகவும், ஒரு சில மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் எம்எல்ஏக்களுடன் தேசிய அளவில் ஓரளவு முக்கிய கட்சியாக வும் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ரூ. 70,000 கோடி ஊழலில் இருந்து தப் பிக்கவும், பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி யை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்தார் சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார். அதன்பிறகு தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித் பவா ருக்கே வழங்கிய நிலையில், கட்சியின் நிறுவனரான சரத் பவார் தரப்புக்கு தேசி யவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என பெயரில் புதிய பெயரை அளித்தது தேர்தல் ஆணையம்.
இந்த விவகாரம் தொடர்பாக மகா ராஷ்டிராவின் முக்கிய நகரான புனே யில் சரத் பவார் தலைமையில் நடை பெற்ற அவசர கூட்டத்தில் கட்சியின் சுவர் கடிகாரம் சின்னத்தை பறித்து அஜித் பவாரிடம் தேர்தல் ஆணையம் அளித்துள்ளதால் வரவிருக்கும் மக்க ளவை தேர்தலில் புதிய சின்னத்தில் கள மிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள் ளது. இன்னும் தேர்தலுக்கு இன்னும் 2 மாதமே உள்ள நிலையில், காங்கி ரஸின் கை சின்னத்தில் தேர்தலை எதிர் கொள்ளலாமா? இல்லை புதிய சின் னத்திலேயே களமிறங்கலாமா என விவாதம் நடந்துள்ளது.
ஆனால் உள்ளூர் ஊடகங்கள் சரத் பவார் தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க உள்ளதாக செய்திகளை பரப்பி உள்ளன.