புதுதில்லி, ஆக., 11- முறைகேடு குற்றச்சாட்டுகளில் விசாரணை நடத்தாமல் இருக்க வெளி நாட்டு பங்குகளை செபி தலை வருக்கு கொடுத்து, செபி நிறுவனத்தை யும் அதானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்ததாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி யுள்ளது.
அமெரிக்க ஷார்ட் செல்லிங் என்ற பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் அதானி குழுமத்தின் பல் வேறு முறைகேடுகளை அம்பலப் படுத்தி, அறிக்கை ஒன்றை வெளி யிட்டது. இந்த அறிக்கை இந்திய அரசியல் மற்றும் பொருளாதர வட்டா ரத்தில் மட்டுமின்றி, உலகளவிலும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமப் பங்குகள் கடுமையாகச் சரிந்து பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை இழந்த நிலையில், ‘போர்ப்ஸ்’ என அழைக்கப்படும் உலகளவிலான பெரும் பணக்காரர்களின் தரவரிசை பட்டியலில் டாப் 3இல் இருந்த அதானி, ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு 20 இடங்களுக்கு கீழே இறங்கினார்.
குஜராத் முதல்வராக மோடி இருந்த காலத்திலிருந்தே கவுதம் அதா னிக்கும் மோடிக்கும் மிக நெருங்கிய நட்பு உள்ள நிலையில், மோடி ஆட்சி மூலம் தொழில் ரீதியான மிகப்பெரும் ஆதாயங்களை கவுதம் அதானி அடைந்திருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின. மேலும், அதானி குழு மத்துக்குப் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கியிருப்பதாலும், பொதுத் துறை நிறுவனங்கள் பல அதானி குழு மப் பங்குகளில் முதலீடு செய்திருப்ப தாலும், அதானி குழுமத்தின் முறை கேடுகள் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் அதானி பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் ஒன்றிய அரசு, அதானி மீதான முறைகேடு விவ காரத்தை இன்று வரை மூடி முறைக்க முயன்று வரும் நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மீண்டும் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்
அதானி விவகாரத்தை விசாரிக்க வேண்டிய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையமான ‘செபி’, ஹிண்டன்பர்க் தொடர்பாக முறையான விசாரணை நடத்தாமல் அதானிக்கு ஆதரவாக செயல்படுவதாக கடந்த ஆண்டே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டு உண்மையானது என்பதை ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆகஸ்ட் 10 அன்று இரவு வெளியிட்ட அறிக்கை மூலம் ஆதாரத்துடன் போட்டு டைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன் அதானிக்கு ஆதரவாகவே செபி செயல்படுவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் காட்டமான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், ஆகஸ்ட் 10 அன்று இரவு அதானிக்கும் - செபிக்கும் இடையேயான உறவு குறித்து ஹிண்டன் பர்க் வெளியிட்ட அறிக்கையில், “எங் களது ஆய்வில் குறிப்பிட்ட அதானி குழு மத்தின் சந்தேகத்திற்குரிய பங்கு தாரர்களுக்கு எதிராக தக்க நட வடிக்கைகளை எடுக்க செபி விரும்ப வில்லை. அதாவது இந்தியா இன்போ லைனின் “இ.எம். ரீசர்ஜண்ட் பண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்” நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதற்கு செபியின் தலைவர் மாதவி பூரி புச், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி பயன்படுத்திய அதே நிதி யைப் பயன்படுத்துவதில் உடந்தை யாக இருப்பது காரணமாக இருக்க லாம். அதானி நிறுவனம் வெளிநாடு களில் உருவாக்கிய போலி நிறுவனம் ஒன்றில், செபியின் தலைவராக இருக் கும் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக் கான பங்குகளை வைத்துள்ளார்.
செபி தலைவராக மேற்கண்ட மாதவி நியமிக்கப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, மொரீஷியஸை சேர்ந்த நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடென்ட் டிரஸ்டுக்கு “குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட்” எனும் மற்றொரு நிறுவனத்தில் தானும் தனது மனைவியும் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக தவல் புச் (மாதவி கணவர்) மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். செபியின் தலைவர் மாதவி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறு வனத்தின் தெளிவற்ற வெளிநாட்டு நிறு வனங்களில் (அதாவது, வேறு வேறு பெயர் களில் பதிவு செய்யப்பட்டுள்ள போலி நிறு வனங்களில்) பங்கு வைத்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. செபி தலைவர் தனிப் பட்ட ஆதாயத்திற்காக இவ்வாறு செயல் பட்டுள்ளதால், ஒன்றிய அரசின் உயர் கட்டுப் பாட்டு நிறுவனமான ‘செபி’யின் வெளிப் படைத்தன்மை முற்றாக, கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன் காரண மாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர் களுக்கு எதிராக செபி இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறுதி யாகியுள்ளது. அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளி நாட்டு நிறுவனங்களின் நிதி தொடர்பான தகவல்கள் மிகவும் தெளிவற்றதாகவும் சிக்க லான விபரங்கள் மற்றும் தொடர்புகளைக் கொண்டதாகவும் உள்ளன” என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
அதானி குழுமம் மழுப்பல்
ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத் துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் குழுமத்திற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிரா கரிக்கிறோம். ஹிண்டன்பர்க்கின் குற்றச் சாட்டுகள் இந்தியச் சட்டங்களை அவமதிக் கும் ஒரு அவநம்பிக்கையான நிறுவனத் தால் வீசப்பட்ட அம்புகள் தானே தவிர வேறல்ல” என மழுப்பலாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘செபி’ தலைவர் ஒப்புதல்
ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கையின் பெரும்பாலான தகவல்களை செபி தலை வர் மாதவி, அவரது கணவர் தவல் புச் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக இருவரும் கூறுகையில், ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ள முதலீட்டு நிதியத்தில் 2015இல் தானும், தன் கணவரும் முதலீடு செய்ததிருந்தாகவும், செபியில் இணைவதற்கு 2 ஆண்டுக்கு முன்பு, சிங்கப் பூரில் வசித்தபோது முதலீட்டு நிதியத்தில் முத லீடு செய்திருந்ததாகவும், ஐ.பி.இ. பிளஸ் நிதியத்தில் தலைமை முதலீட்டு அதிகாரி யாக இருந்த அனில் அகுஜா தன் கணவர் தவ லுக்கு நண்பர் ஆவார் எனவும் மாதவி கூறி யுள்ளார்.
மாதவி பொறுப்பேற்றவுடன் சந்தித்த முதல் நபர் அதானி
கொரோனா ஓய்ந்த பின்பு கடந்த 2022இல் மாதவி புச் செபியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அடுத்த 6 மாதத்திற்குள் மாதவியை அதானி சந்தித்துள்ளார். வணிக ரீதியிலாக மாதவியைச் சந்தித்த முதல் நபர் அதானி தான். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”2022இல் மாதவி செபியின் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், கவுதம் அதானியைச் சந்தித்துப் பேசியிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது. அந்த நேரத்தில் அதானி பரிவர்த்தனைகளை செபி விசாரித்ததாகக் கூறப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செபி தலைவரை நீக்குங்கள்!
கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்க வேண்டும்: சிபிஎம்
அதானி குழுமம் பங்குச்சந்தை விலைகளில் தில்லுமுல்லுகள் செய்ததை ஏற்கனவே வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஹிண்டர்பர்க் ஆய்வுகள், இப்போது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவர், மாதாவி பூரி புச் என்பவருக்கு எதிராக மிக ஆழமான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறது. அவை, மாதவியும் அவருடைய கணவரும் அதானி குழுமங்களில் முதலீடு செய்வதற்காக வினோத் அதானியால் பயன்படுத்தப்பட்டு வரும் போலி நிதி நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்த ஆவணங்களை மேற்கோள் காட்டியிருக்கின்றன.
இத்தகைய குற்றச்சாட்டுகள் பங்குச்சந்தை வணிகத்தை முறைப்படுத்தும் நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், ஒரு முறையான புலன்விசாரணை நடத்தப்படும் வரையில் அந்நிறுவனத்தின் தலைவர் நீக்கப்படுதல் அவசியமாகும். அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு தொடர்பான முழு விவகாரத்தையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு மீண்டும் வலியுறுத்துகிறது.
மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை