india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள மாநிலம் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மிதமான கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாதப் பூரில் நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்த மான மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தும்மிடி குண்டா ஏரிக்கு சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலை யில், சனியன்று மண்டபத்தை இடித்து தரைமட்ட மாக்கினர் தெலுங்கானா அரசு அதிகாரிகள்.

காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்ட மால் கலப்பு மருத்துகள் உட்பட 156 மருந்து களை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. அசெக்ளோபெனாக் மற்றும் பாராசிட்டமால் கல வையாக கொண்ட 156 மருந்து, மாத்திரையையும் இனி விற்பனை செய்ய முடியாது. ஒன்றிய அரசின் இந்த முடிவால் சிப்லா, லுபின், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் சில மாத்திரைகளின் உற்பத்தி குறைக்கப்படும்.

ஜோர்டானில் நடைபெற்ற மகளிர் மல்யுத்த தொடரின் இறுதி போட்டியில் வென்று சாம்பியனான நேஹா சங்வான் வெற்றியை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு அர்ப்பணிப்பதாக கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா மருத்துவர் மாணவி பாலியல் வன்கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பள்ளியில் டாப்பராக இருந்ததாகவும், யாருக்கும் தீங்கு செய்மாட்டான் என்றும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குறித்து பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி தெரிவித்த கண்ணியமற்ற கருத்துக்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஆர்ஜி கர் மருத்து வக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் நான்கு மருத்துவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனையான பாலிகிராஃப் நடத்தும் செயல்முறை தொடங்கியது.