india

img

மெட்ரோ திட்டம், கல்விக்கு நிதி வழங்குக; மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்க!பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

புதுதில்லி, செப். 27 - தமிழகத் திட்டங்களுக்கான நிதியை, தாமதமின்றி ஒதுக்கீடு செய்யுமாறு, பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்

இரண்டு நாள் பயணமாக, வியாழ னன்று இரவே தில்லி வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வெள்ளிக் கிழமை காலை தில்லியில் சவுத் பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித் தார்.

மூன்று முக்கியக் கோரிக்கைகள்

இந்தச் சந்திப்பின் போது, ‘சமக்ர சிக்‌ஷ அபியான்’ என்ற ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய, ரூ. 2 ஆயிரத்து 152 கோடியில், முதற்கட்ட நிதி ரூ.573 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும், இலங்கைக் கடற் படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத்தீர்வு வேண்டும், ரூ. 63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ 2-ஆம்  கட்டப் பணிகளுக்கான நிதியில் 50 சதவிகித பங்குத் தொகையை விடு விக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதுதொடர்பான விரிவான மனுவையும் பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

பிரதமர் தான் பயனுள்ள சந்திப்பாக்க வேண்டும்

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு, வெளியே வந்த  முதல்வர் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். 

அப்போது, “பிரதமருடனான சந்திப்பு இனிதாக நடைபெற்றது” என்றும், ஆனால், “இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது” என்று முதல்வர் கூறினார்.

“ஒன்றிய அரசு உடனடியாக நிறை வேற்றிக் கொடுக்க வேண்டிய 3 கோரிக்கை களை பிரதமரிடம் கொடுத்துள்ளோம்” என்று கூறிய முதல்வர், “சென்னை மெட்ரோ  ரயிலின் முதல்கட்ட பணிகளை ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி யது போன்று, இரண்டாம் கட்ட பணி களையும் இணைந்து செயல்படுத்துவது தான் எங்களின் நோக்கம். 

மெட்ரோ திட்டத்திற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்

அந்தவகையில், இரண்டாம் கட்டப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள 2019-ஆம் ஆண்டு கடன் பெற்றும், மாநில  அரசு நிதியில் இருந்தும் பணிகள் தொடங்கப் பட்டன. பின்பு ஒன்றிய அரசுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சரிடமும் ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சரும் 2021-ஆம்  ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தார். ஆனால்,  இதுவரை ஒன்றிய அரசின் நிதி (திட்ட மதிப்பீடு ரூ. 63 ஆயிரத்து 246 கோடியில் 50 சதவிகிதம்) தமிழகத்துக்கு வழங்கப்படாத தால், மெட்ரோ பணிகளில் தொய்வு ஏற் பட்டுள்ளது. மாநில அரசு ரூ. 18 ஆயிரத்து 574  கோடியை செலவிட்டுள்ளது. ஆகையால், மெட்ரோ திட்டத்திற்கான நிதியை தாமத மின்றி வழங்க கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது” என்றார்.

பள்ளிக் கல்விக்கான நிதி வழங்கப்படாமல் உள்ளது

“இரண்டாவதாக, ஒன்றிய அரசின்  60 சதவிகித நிதி மற்றும் மாநில அரசின் 40 சதவிகித நிதியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு (சமக்ர சிக்ஷா அபியான்) இந்த ஆண்டு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி  ரூ. 2 ஆயிரத்து 152 கோடியில் முதல் தவணை (ரூ. 573 கோடி) நிதி இதுவரை தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. இதற்கு பி.எம்.ஸ்ரீ. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு  கையெழுத்திடாததை காரணமாக கூறு கின்றனர். 

தேசிய கல்விக் கொள்கையை விட காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல  முன்னோடித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மொழி திணிக்கப்படாது என்று ஒன்றிய அரசு கூறினாலும், ஒப்பந்தத்தில் அதற்கான ஷரத்து இல்லை. எனவே, ஒப்பந்தத்தில் திருத்தம் தேவை என்கிறோம். 

ஆசிரியர்களுக்கு ஊதியம்  வழங்க முடியாத சூழல்

ஆனால், இதைக் காரணம் காட்டி நிதி  வழங்காததன் காரணமாக ஆசிரியர் களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ லும், 43 லட்சத்து 94 ஆயிரத்து 906 மாண வர்கள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள் ளது. இதனைப் பிரதமரிடம் எடுத்துக் கூறி யுள்ளோம்” என்று தெரிவித்த முதல்வர் ஸ்டா லின், “மூன்றாவதாக, தமிழக மீனவர் களை இலங்கை கடற்படையினர் பிடித்து துன்புறுத்துகின்றனர். கடந்த சில ஆண்டு களாக அதிகளவில் இந்த சம்பவம் நடைபெறுகிறது. 191 மீன்பிடிப் படகுகள், 145 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். எனவே, உடனடியாக இலங்கை அரசிடம் பேசி  தீர்வு காணவும், அடுத்தமாதம் கொழும்பு வில் நடைபெற உள்ள இந்திய - இலங்கை இடையிலான கூட்டுக்குழு கூட்டத்தில்  இதுதொடர்பாக விவாதித்து தீர்வு காணப்பட வேண்டும்; பிரதமரின் தனிப் பட்ட தலையீட்டில் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று  ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, தமிழ்நாட்டின் பாரம்ப ரியத்தை பறைசாற்றும் விதமாக ‘தடம்’ பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசளித்தார். நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை, பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்பி ராய்டரி சால், பவானி ஜமுக்காளம் ஆகியவை இந்த பரிசுப் பெட்டகத்தில் இடம்பெற்றிருந்தன.

‘இலங்கை புதிய ஜனாதிபதியிடம் பேச வேண்டும்!’

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, தில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

அப்போது, “வழக்கமாக 15 நிமிடம் ஒதுக்கும் பிரதமர் மோடி, இன்று 45 நிமிடங்கள் நேரம் கொடுத்தார். 3 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினேன். மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். 

கச்சத்தீவை திமுக தாரைவார்த்ததாக கூறுவது தவறு. கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நான் ஒரு முதல்வராக பிரதமரை சந்தித்தேன். அவர் ஒரு பிரதமராக கோரிக்கைகளை கேட்டுக்கொண்டார்” என்றார்.