வரவிருக்கும் மக்களவைத் தேர் தலில் மோடியின் பாஜக 200 தொகுதிகளை கூட தாண்டு வது சிரமம் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதனால் மிரண்டு போயுள்ள பாஜக, காங்கி ரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக களமிறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தங்கள் பக் கம் சேர விரும்பாத காங்கிரஸ் நிர்வாகி களை பாஜக எம்எல்ஏ கடத்திய சம்ப வம் ஒன்றும் அரங்கேறியுள்ளது. கர நாடகா மாநிலம் நந்தினி லே -அவுட் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழி லாளியான சாமுவேல் அப்பகுதி காங் கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக வும் உள்ளார். இவரை முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான எம்.முனிரத்னாவின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு வயலிகாவலில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சாமுவேலை இரண்டு நாட்களாக அடைத்து வைத்து அவரை பாஜக வில் இணையுமாறு வற்புறுத்தியுள்ள னர். அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து வந்த சாமுவேல் நந்தினி லே-அவுட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையெடுத்து பாஜக எம்எல்ஏ முனிரத்னா உட்பட 5 பேர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
தோல்வி பயத்தில் உள்ள பாஜக காங்கிரஸ் நிர்வாகியை கடத்திய சம்ப வம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.