கங்கனாவின் வெறியுரை: பாஜக எரிச்சல்
பாஜக எம்பி கங்கனா ரணா வத்தின் “விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்ற கருத் தை பாஜக நிராகரித்தது. இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், கங்கனாவின் கருத்துக்களிலி ருந்து கட்சி விலகிக் கொண்டதற்கு நன்றி தெரிவித்தார். “ரணாவத்தின் தொடர்ச்சி யான வெறியுரை, சீக்கிய சமூகம், பஞ்சாப் விவசாயிகளுக்கு எதிரான பயனற்ற, அடிப்படையற்ற மற்றும் அர்த்தமற்ற அறிக் கைகள் பஞ்சாபின் நலனுக்காக பிரதமர் மோடி செய்த அனைத்து நல்ல பணிகளை யும் சேதப்படுத்துகின்றன” என்று கூறினார்.
புதுதில்லி
பாராசிட்டமால் உட்பட 53 மாத்திரைகளில் தரம் இல்லை
மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய சோதனையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாராசிட்டமால், கால்சியம், வைட்டமின் டி3 சப்ளிமெண்ட்ஸ், நீரிழிவு எதிர்ப்பு மாத்திரைகள், உயர் இரத்த அழுத்த மருந் துகள் உள்ளிட்ட 53 மருந்துகள் தரமற்றதாக உள்ளன என தெரிய வந்துள்ளது.
இது மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகி யுள்ளது. மக்கள் அதிகம் உட்கொள்ளக் கூடிய மற்றும் அதிகம் விற்பனையாகும் மருந்துகளான வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி சாப்ட்ஜெல்ஸ், ஆன்டி ஆசிட் பான்-டி, பாராசிட்டமால் ஐபி 500 மி.கி, நீரிழிவு எதிர்ப்பு மருந்தான க்ளிமி பிரைடு, உயர் இரத்த அழுத்த மருந்து டெல்மிசார்டன் ஆகியவையும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த மருந்துகளை ஹெட்டோரோ மருந்தகம், அல்கெம் ஆய்வகங்கள், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமி டெட் (எச்ஏஎல்), கர்நாடக ஆண்டிபயா டிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், மெக் லைஃப் சயின்சஸ், ப்யூர் & க்யூர் ஹெல்த் கேர் உள்ளிட்ட இன்னும் சில நிறுவனங்கள் தயாரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இதில் அரசு பொதுத்துறை நிறுவனமாக உள்ள ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக் லிமி டெட் (HAL) தயாரித்த மெட்ரானிடசோல் என்ற வயிற்று நோய்த்தொற்றுகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்தும் தரப் பரி சோதனைகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.