india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கடந்த 2 நாட்களாக தில்லியில் மழை பெய்த நிலையில், ஞாயிறன்று தில்லியில் 39.8 டிகிரி  செல்சியஸ் அளவில் கொளுத்தியது. புழுதிப் புயல்,  மழை, திடீரென அதிகரிக்கும் வெயிலால் தில்லி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயி றன்று ஆலோசனை நடத்தினார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை யினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 12  மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப் பட்டதாகவும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 12 துப்பாக்கிகள், வெடிமருந்துகள், சீருடைகள், பத்திரிகை உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது எம்.பி நிதியில் 70% க்கும் அதிக மாக சிறுபான்மையினருக்காக செலவிட்டார். காந்தி குடும்பம் பொய் சொல்வதில் வல்லுநர்கள்” என ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டம் தமிழ் நாடு தலைநகர் சென்னையில் ஞாயிறன்று நடைபெற்றது. சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை மக்கள் நேசிக்கும் முதல்வர் என பாஜக தலைவரும்,  முன்னாள் முதல்வருமான எடியூ ரப்பா பாராட்டியுள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்டத்தில் போட்டியிடும் 1,710 வேட்பாளர்களில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், 476 பேர் கோடீஸ்வரர்களாகவும், 24 பேரிடம் சொத்து ஏதும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குவங்கத்தில் திங்களன்று 4ஆம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், சந்தேஷ்காளியில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக குண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி  மோதிக் கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவங்க ளால் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதற்ற மான சூழல் ஏற்பட்டுள்ளது.

பாட்னா
மல்லிகார்ஜுன கார்கேவின் ஹெலிகாப்டர் பீகாரில் சோதனை

தற்போது வரை நடைபெற்ற மூன்று கட்ட தேர்தலில் பாஜகவிற்கு சாத கமான சூழல் இல்லை என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரு கின்றன. தோல்வி பயத்தால் மிரண்டு  போயுள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட  பாஜகவினர் பல்வேறு சித்துவிளை யாட்டுகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த  தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே சனியன்று பீகார்  மாநிலத்தின் சமஸ்டிபூர் மற்றும் முசா பர்பூர் மக்களவைத் தொகுதிகளில் தேர் தல் பிரச்சாரங்களில் உரையாற்றினார்.  அப்போது சமஸ்டிபூரில் கார்கேவின் ஹெலிகாப்டரில் சோதனை செய்யப்பட்ட தாக பீகார் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் தனது டுவிட்டர் எக்ஸ் இணையதளத்தில் வீடியோ ஆதாரத்தின் மூலம் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோவில் காவல்துறையினர் உட்பட அதிகாரிகள் ஹெலிகாப்டர் சுற்றி சோதனை செய்யும்  காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும்  வீடியோ பதிவில்,”காங்கிரஸ் தலை வர்களின் ஹெலிகாப்டர்களை மட்டும்  சோதனை செய்வது வழக்கமானதா என்ப தையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் உயர்மட்ட தலைவர்களிடமும் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டதா என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இதுபோன்ற சோதனைகள் அனைத்தையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையெனில் எதிர்க் கட்சித் தலைவர்களை மட்டுமே குறி வைத்து அவர்களைத் தடுக்கிறது என்றும், பாஜக கூட்டணி தலைவர்களை சுதந்திர மாகச் செல்ல அனுமதிப்பதாகக் கருதப்  படும். இவ்வாறு சோதனை செய்யப்பட்ட  அனைத்து தலைவர்களின் வீடியோக் களையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்” என்று கண்டனம் தெரிவித் துள்ளார். 

இதற்கு முன் ராகுல் காந்தியின் ஹெலி காப்டர் கேரளாவில் சோதனை செய்யப்பட்டது என்ற நிலையில், கார்கே வின் ஹெலிகாப்டர் சோதனைக்கு “இந்  தியா” கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். 

திருப்பதி 
திருப்பதி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்
‘சத்தியம்’ வாங்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர்

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை  மற்றும் 175 சட்டமன்ற தொகுதி களுக்கு ஒரே கட்டமாக திங்க ளன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. . ஆந்திராவிலேயே திருப்பதி சட்ட மன்ற தொகுதியில் மட்டுமே அதிகபட்ச மாக 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ள  நிலையில், திருப்பதி சட்டமன்ற தொகு தியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம்  வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வீடியோவில் பணம் அளித்துவிட்டு, வாக்காளர்களிடம் எரியும் கற்பூர நெருப்பில் சத்தியம் வாங்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்  கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.