மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம், அடுத்தாண்டு இந்திய விண்வெளி வீரர்கள் விண்ணுக்குச் செல்ல உள்ளனர். இந்நிலையில், விண்வெளிக்கு செல்லும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷூ சுக்லா ஆகிய 4 வீரர்களை பிரதமர் மோடி செவ்வாயன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அறிமுகப்படுத்தினார்.