மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்திற்குள் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
பட்டங்கள் வழங்குவதில் பல பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து தாமதம் செய்வதாக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்திற்குள்ளாக பட்டங்களை வழங்க வேண்டும். தாமதம் செய்தால் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.