ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் பாஜகவைச் சேர்ந்த 5 பேரை நியமன எம்எல்ஏக் களாக நியமிக்க துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திட்டமிட் டுள்ளதாகவும், இதுதொடர்பான வெளிப் படையான அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், “நியமன எம்எல்ஏக் கள் விஷயத்தில் தலையிட்டால் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைகிறது. மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட ஆட்சிக்குதான் நியமன எம்எல்ஏக்களை பரிந்துரைக்கும் அதிகா ரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக் கான உரிமையில் துணைநிலை ஆளு நர் தலையிடக் கூடாது. அரசு தரப்பு பரிந்துரைக்கும் நியமன எம்எல்ஏக்களை துணை நிலை ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். இதனை மீறி துணை நிலை ஆளுநரே நியமன எம்எல்ஏக்களை நிய மித்தால் அது தவறான முன்னுதாரணமா கும். அப்படி ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்
ராஜ்பவனில் டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆஜராக மாட்டார்கள்
ஆளுநருக்கு கேரள முதல்வர் கடிதம்
கேரள ஆளுநர் மாளிகையில் டிஜிபியும், தலைமைச் செய லாளரும் வர மாட்டார்கள் என ஆளுநருக்கு முதல்வர் பினராயி விஜ யன் கடிதம் எழுதியுள்ளார். தங்கக் கடத் தல், ஹவாலா மூலம் பணம் தேசவிரோ தச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படு வதாக “தி இந்து” நாளிதழில் முதல்வர் கூறியதாக வந்த செய்தி தொடர்பாக கேரள தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். இருவரும் அக். 8 செவ்வா யன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளி கையான ராஜ்பவனுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தெரிவிக்கா மல் அதிகாரிகளை அழைக்க ஆளுந ருக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக் காட்டி ஆளுநருக்கு முதல்வர் பதிலடி கடி தம் கொடுத்துள்ளார்.
கொல்கத்தா
ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா
திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் தொடர் போரா ட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்து வர்களின் உடல்நிலை வேகமாக மோச மடைந்து வருவதை வெளிப்படுத்தி, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் 40க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள், ஊழியர்கள் என 50 பேர் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.