india

img

பிளவுவாதம் - சொத்துக்களை அழிக்கும் நோக்கம் கொண்ட வக்பு சட்ட மசோதா!

இஸ்லாமியர்க்கு எதிரான பிளவுவாத அரசியலும், சொத்துக்களை அபக ரிக்கும் நோக்கமுமே வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா- 2024இல் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் குற்றம் சாட்டி னார்.

வக்பு (திருத்த) சட்ட மசோதா மீது மக்களவையில் பேசுவதற்கு சச்சிதானந்தம் எம்.பி.க்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், தமது எதிர்ப்பை முன்வைக்கும் விதமாக சபாநாயகருக்கு ஆர். சச்சிதா னந்தம் எம்.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:

வக்பு வாரியம் என்பது இஸ்லா மிய மக்களின் நன்மைக்காக அந்த சமூகத்தின் பரந்த மனப் பான்மை உடையவர்கள் தரும் நன்கொடை மூலம் உருவான சொத்துக்கள் ஆகும். 

‘வக்பு வாரியச் சட்டம்- 1954’ என்பதன் நோக்கம் வக்பு சொத்துக் கள் பெறப்படுவதைக் கண்கா ணிக்கும் இலக்கைக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக 1958-ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்து மாநில அரசாங்கங்களிலும் வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. 

வக்பு சொத்தைப் பாதுகாக்க போதிய ஏற்பாடுகள் உள்ளன

1954-ஆம் ஆண்டுச் சட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு, விரி வாக்கம் செய்து ‘வக்பு வாரியச் சட்டம்- 1995’ உருவானது. 2013-ஆம் ஆண்டின் திருத்தங்கள் மேலும் வக்பு வாரிய சட்டத்தை வலுப் படுத்தின. இந்த சட்டத்தின் விதிகள் வக்பு சொத்துக்களை கண்காணிக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் வழிவகுக்கின்றன. இந்தச் சொத்துக்கள் மூலம் கிடைக் கும் வருமானம் எந்த நோக்கத் துக்காக இந்த வாரியம் உருவாக் கப்பட்டதோ அந்த நோக்கம் நிறை வேறுகிறதா என்பதை உத்தரவா தம் செய்து கண்காணிக்கவும் இந்த விதிகள் வழி வகுக்கின்றன. 

வக்பு சொத்துக்களை ஆய்வு செய்வது கட்டுப்படுத்துவது, முறைப்படுத்துவது ஆகியவை மாநில அரசாங்கங்களின் வரை யறைக்கு உட்பட்டது. மாநில அர சாங்கத்தின் வருவாய்ப் பிரிவு தான் வக்பு சொத்துக்களை அடையா ளம் காண்கின்றன. 

வக்பு வாரியத்தின் முதன்மை அலுவலர் மாநில அரசாங்கத்தால் பணியமர்த்தப்படும் அரசு அதி காரி. தற்பொழுது உள்ள மாநில அரசின் கட்டமைப்பு மூலம் சொத்துக்களை கண்காணித்து அவை ஆக்கிரமிக்கப்பட்டால் அல்லது தவறாக கையகப் படுத்தப்பட்டால் அதனை தடுக்கச் சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

ஊடகங்களுக்கு கசியவிடப்பட்ட வரைவு மசோதா விதிகள்

தற்பொழுது உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அர சாங்கம் வக்பு சட்டத்தில் 40 திருத் தங்களை கொண்டு வர முன்மொழி கிறது. இதன் வரைவு வடிவம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தரப்படுவதற்கு முன்பே ஊட கங்களுக்கு கசியவிடப் பட்டுள்ளன. 40 திருத்தங்கள் என்பது வக்பு சட்டத்தையே மாற்றிய மைக்கும் அல்லது சீர்குலைக்கும் அபரிமிதமான ஆழமான முயற்சி ஆகும்.

இத்தகைய நடவடிக்கைகள் என்டிஏ அரசின் நோக்கம் குறித்து கேள்வியை விளைவிக்கிறது. இந்த அரசாங்கம் மதவழிச் சிறு பான்மை மக்களின் உரிமைகள் குறித்து அணுகும் தன்மை ஏற்கெனவே மிகவும் கொடூரமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  

ஒன்றிய அரசாங்கம் இந்தத் திருத்தங்களை கொண்டு வரும் இந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்து  நாளிதழுக்கு பேட்டி அளித்துள் ளார். அந்த பேட்டியில் இந்தச் சட்டத் திருத்தங்களை, ஏழை முஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் வெகு நாட்களாக கோரி வருகின்றனர் என கூறியுள்ளார். 

பெண்கள் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளனர்

தற்சமயம் முன்மொழியப் பட்டுள்ள திருத்தங்கள் வக்பு வாரி யங்கள் செயல்படுவதில் கூடுத லான பொறுப்புணர்வு- வெளிப்ப டைத் தன்மையை உத்தரவாதம் செய்வதையும், வாரியத்தில் பெண்கள் இடம் பெறுவதை கட்டாயமாக்குவதையும் இலக்காக கொண்டுள்ளன என பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. 

தற்பொழுது வக்பு வாரி யங்களில் பெண்கள் இல்லை யென அரசு பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. இது உண்மை அல்ல. பல இடங்களில் பெண்கள் உறுப்பி னர்களாக இருப்பது மட்டுமல்ல; வாரியத்துக்கு தலைவராகவும் பெண்கள் உள்ளனர். 

முஸ்லிம் சமுதாயத்தை இடை விடாது பயமுறுத்தலில் வைத்தி ருக்க வேண்டும் என பாஜக தலைமை தாங்கும் இந்த அரசு எண்ணுகிறது என்பது தெளிவு.

இந்த அரசு வக்பு வாரியத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக பிளவுவாத அரசியலை முன்னெ டுப்பதில்தான் ஆர்வமாக உள்ளது. மேலும் வக்பு சொத்துக்களை கை கொள்ள வேண்டும் எனும் நோக்கமும் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. 

எனவே, வக்பு சட்டத் திருத் தம்-2024ஐ அதன் அறிமுக கட்டத்திலேயே நாங்கள் வன்மை யாக எதிர்க்கிறோம். இதனை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.